search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NIGHT SERVICE"

    • தற்போது இயங்கும் ரெயில்களில் அமரும் வசதி மட்டுமே உள்ளது
    • தமிழக நகரங்களுக்கு இடையே 2 ரெயில்கள் இயங்குகின்றன

    இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பல்வேறு நகரங்களை இணைக்கவும், மாநிலங்களிக்கு உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலும் இந்தியன் ரெயில்வேயால் துவங்கப்பட்டது 'வந்தே பாரத்' ரெயில் சேவை.

    தற்போது பகல் நேர ரெயில் சேவையாக இருப்பதால், அமரும் வசதி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    எந்த அயல்நாட்டு தொழில்நுட்பத்தையும் நாடாமல், இந்த ரெயில்களின் கட்டமைப்பு 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஐ.சி.எஃப். நிறுவனத்தாலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்டது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

    தற்போது வரை இந்தியா முழுவதும் 34 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோவை-சென்னை வழித்தடத்திலும், திருநெல்வேலி-சென்னை வழித்தடத்திலும் என 2 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், படுக்கை வசதியுடன் வரப்போகும் வந்தே பாரத் ரெயில்களின் 'மாதிரி' வடிவங்களின் படங்களை இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.

    16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் பணியாளர்களுக்கு 34 படுக்கைகளும் பயணிகளுக்கு 823 படுக்கைகளும் என மொத்தம் 857 படுக்கைகள் இடம்பெறும். அதிர்வுகளை தாங்க கூடிய மேம்படுத்தப்பட்ட ஷாக் அப்சார்பர்கள், போதிய அளவு வெளிச்சத்திற்கான மின் விளக்குகள், இரண்டு படுக்கைகளுக்கு இடையே போதிய இடைவெளி, மேலே உள்ள படுக்கைகளுக்கு சுலபமாக ஏறும் வகையில் படிக்கட்டு வசதி என பயணிகளை ஈர்க்கும் வகையில் பல வசதிகள் இதில் உள்ளது.

    உயர் கட்டண பிரிவு ரெயில் சேவையான ராஜ்தானி விரைவுவண்டியில் உள்ள வசதிகளை விட இது சிறப்பாக இருக்கும் வகையில், இதன் வடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

    அடுத்த வருடம் பிப்ரவரி மாதவாக்கில் சோதனை ஓட்டத்திற்கு இது விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 கிராமங்களில் இரவில் ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்
    • பகலில் கூட ஏதாவது ஒரு தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ள முடியும். இரவில் அதற்கெல்லாம் சாத்தியம் இல்லை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 35 இடங்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் வல்லத்திராக்கோட்டை, காரையூர், பரம்பூர், புனல்குளம், மழையூர், வாராப்பூர் மற்றும் ராஜநாயக்கர்பட்டி ஆகிய இடங்களில் 108 ஆம்புலன்ஸ் இரவு நேரங்களில் இயக்கப்படுவதில்லை என்றும். பகல் நேரங்களில் மட்டுமே இயக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

    நாள் முழுவதும் இயக்கப்பட்டு வந்த இந்த ஆம்புலன்ஸ்கள் கடந்த சில மாதங்களில் இரவு நேரங்களில் இயக்கப்படுவது ஒவ்வொரு இடமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 7 இடங்களுமே கிராமப்பகுதிகளாக இருப்பதால் அப்பகுதியினரால் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு உடனடியாக மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

    எனவே நாள் முழுவதுமாக ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் கூறியதாவது:

    மனிதருக்கு எப்போது அவசர உதவி தேவைப்படும் என்று யாரும் முன்கூட்டியே கணிக்க முடியாது. எனவே பகலில் ஆம்புலன்ஸை இயக்கி விட்டு இரவில் இயக்காமல் இருப்பது நல்லத்தல்ல. பகலில் கூட ஏதாவது ஒரு தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ள முடியும். இரவில் அதற்கெல்லாம் சாத்தியம் இல்லை.

    எனவே பொதுமக்களின் அசரத்தேவைக்காக கொண்டு வரப்பட்ட மிகவும் பயனுள்ள இந்தி திட்டத்தில் இரவு, பகல் பாராமல் அனைத்து நேரங்களிலும் சேவையை தொடர செய்ய வேண்டும். இத்தகைய இடையூறுக்கு பராமரிப்புக்கான நிதிப் பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை என்றெல்லாம் அலுவலர்கள் காரணம் கூறுவதாக தெரிகிறது.

    நிர்வாகத்தின் இத்தகைய செயலைப் பார்க்கும் போது இந்த திட்டத்தையே முடக்கி விடுவார்களோ என கருதத் தோன்றுகிறது. எனவே இதில் கலெக்டர் தலையிட்டு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    இது குறித்து சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ஆம்புலன்சில் பணிபுரியும் பெண் மருத்துப் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பில் உள்ளதால் 7 வாகனங்களை முழுநேரமும் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

    இதனால் குறைந்த தொலைவிலேயே அடுத்த ஆம்புலன்ஸ் சேவை வசதியுள்ள பகுதிகளில் மட்டும் தற்காலிகமாக இரவில் ஆம்புலன்ஸ் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் சேவை பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    ×