என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "National Aptitude Test"
- மத்திய அரசு சார்பில், ஆண்டு தோறும், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
- இதில் தேர்ச்சி பெறும், ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் 4,607 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள், இடைநிற்றலை கைவிட்டு, உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திலும், மத்திய அரசு சார்பில், ஆண்டு தோறும், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும், ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில், பள்ளிக்கல்வி த்து றை சார்பில், ஆண்டு தோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தேர்வை எழுத தகுதியானவர்கள். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவியருக்கு, மாதம் தோறும் ரூ. 1,000 வீதம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை, சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாண வர்களுக்கு 9 முதல் பிளஸ் 2 வரை 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 48 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி, 2022-–23-ம் கல்வி ஆண்டில், அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டத்தில், 15 மையங்க ளில் இன்று இத்தேர்வு நடைபெற்றது. அதில், மொத்தம் 4,607 மாணவ, மாணவியர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவுகள் வெளி யான பிறகு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
- தேசிய திறனாய்வு தேர்வு பயிற்சி முகாம் நடந்தது.
- இதில் 20 மாணவர்கள் பங்கேற்றனர்.
மானாமதுரை
மானாமதுரை வட்டார அளவிலான 21 அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் 3 உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த 140 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு இனறு (25-ந்தேதி) நடைபெற்றது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழ்நாட்டை சேர்ந்த 6,695 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48 ஆயிரம் அந்தந்த மாணவர்கள் வங்கி கணக்கில் மத்திய அரசு சார்பில் கல்வி உத வித்தொகை வழங்கப்பட உள்ளது.
இதில் மானாமதுரை வட்டார அளவிலான நடுநிலைப்பள்ளி மாணவர்க ளை அதிக அளவில் தேர்ச்சி பெற வைக்கும் நோக்கில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆலோ சனைப்படி மானாமதுரை ஒ.வெ.செ. மேல்நி லைப்பள்ளியில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமியால் தொடங்கி வைக்கப்பட்டு கடந்த வாரம் 3 நாட்களும், இந்த வாரம் 3 நாட்களும் என மொத்தம் 6 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து மாதிரி தேர்வு நடந்தது. இதில் 20 மாணவர்கள் பங்கேற்றனர். 7 வகுப்பறைகளில் கண்கா ணிப்பாளர்களைக் கொண்டு முறையான தேர்வு போன்று மாதிரி தேர்வு நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் பால்ராஜ், அஸ்மிதா பானு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜா பார்வையிட்டனர்.கருத்தாளர்கள் சிவகுருநாதன், ஜெப மாலை வளனரசு, நாகராஜன், எட்வின்பால், கற்பகவள்ளி, மேரிஐரீன், நிர்மலா, ராஜரீக மேரி ஆகியோர் பயிற்சி அளித்து தேர்வுகளை நடத்தினர்.
தேர்வு முடிந்தவுடன் உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டு பிற்பகலில் பாராட்டு விழா நடைபெற்றது. சிறப்பாக தேர்வு எழுதிய 10 மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் அஸ்மிதா பானு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா, ஒ.வெ.செ. மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்