search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய திறனாய்வு தேர்வு பயிற்சி முகாம்
    X

    முகாம் நிறைவு விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தேசிய திறனாய்வு தேர்வு பயிற்சி முகாம்

    • தேசிய திறனாய்வு தேர்வு பயிற்சி முகாம் நடந்தது.
    • இதில் 20 மாணவர்கள் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    மானாமதுரை வட்டார அளவிலான 21 அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் 3 உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த 140 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு இனறு (25-ந்தேதி) நடைபெற்றது.

    இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழ்நாட்டை சேர்ந்த 6,695 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48 ஆயிரம் அந்தந்த மாணவர்கள் வங்கி கணக்கில் மத்திய அரசு சார்பில் கல்வி உத வித்தொகை வழங்கப்பட உள்ளது.

    இதில் மானாமதுரை வட்டார அளவிலான நடுநிலைப்பள்ளி மாணவர்க ளை அதிக அளவில் தேர்ச்சி பெற வைக்கும் நோக்கில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆலோ சனைப்படி மானாமதுரை ஒ.வெ.செ. மேல்நி லைப்பள்ளியில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமியால் தொடங்கி வைக்கப்பட்டு கடந்த வாரம் 3 நாட்களும், இந்த வாரம் 3 நாட்களும் என மொத்தம் 6 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து மாதிரி தேர்வு நடந்தது. இதில் 20 மாணவர்கள் பங்கேற்றனர். 7 வகுப்பறைகளில் கண்கா ணிப்பாளர்களைக் கொண்டு முறையான தேர்வு போன்று மாதிரி தேர்வு நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் பால்ராஜ், அஸ்மிதா பானு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜா பார்வையிட்டனர்.கருத்தாளர்கள் சிவகுருநாதன், ஜெப மாலை வளனரசு, நாகராஜன், எட்வின்பால், கற்பகவள்ளி, மேரிஐரீன், நிர்மலா, ராஜரீக மேரி ஆகியோர் பயிற்சி அளித்து தேர்வுகளை நடத்தினர்.

    தேர்வு முடிந்தவுடன் உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டு பிற்பகலில் பாராட்டு விழா நடைபெற்றது. சிறப்பாக தேர்வு எழுதிய 10 மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் அஸ்மிதா பானு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா, ஒ.வெ.செ. மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×