search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namadhu puratchi thalaivi amma"

    சசிகலா மற்றும் தினகரனை தாக்கி அ.தி.மு.க. நாளேடான புரட்சித்தலைவி நமது அம்மாவில் கட்டுரை வெளியாகியுள்ளது. #Jayalalithaa #TTVDhinakaran
    சென்னை:

    சசிகலா- தினகரனை தாக்கி அ.தி.மு.க. நாளேடான புரட்சித்தலைவி நமது அம்மாவில் வெளியாகி உள்ள செய்தி வருமாறு:-

    * ஆர்.கே.நகர் மக்களை
    ஏமாற்ற அல்லக்கையை 
    வைத்து முட்டை 
    போண்டா வெளியிட்ட
    வீடியோ மொத்தமும்
    போலியாம்.... 
    அம்மா சிகிச்சை
    பெறுவது போன்ற
    காட்சிகள்
    அப்பல்லோவில் 
    எடுக்கப்பட்டதல்ல
    என்னும் அதிர்ச்சி தகவல்.
    விசாரணை ஆணைய
    வட்டாரத்திலிருந்து
    பரவுகிறது.

    * அடப்பாவிகளா...
    அன்று அரசு விழாவில்
    அம்மா தடுமாறி
    விழப்போன நிலையிலும்,
    ஆம்புலன்ஸ் ஒன்றை
    போயஸ் தோட்டத்தில்
    நிறுத்தி வைக்காத
    பொறுப்பற்ற கும்பல்.

    * ஐநூறு என்னும் அளவுக்கு
    சுகர் ஏறவும் ஆக்சிஸன்
    அளவு நாற்பதுக்கும்
    கீழே வரும் அளவுக்கு
    வேடிக்கை பார்த்து விட்டு
    நினைவிழந்து
    மயக்கமுற்ற நிலையில்
    அப்பல்லோவில்
    இருந்து வந்த ஆம்புலன்சில்
    ஏற்றி முதலுதவி ஏதும்
    செய்யாமல்
    மருத்துவமனை
    முகப்பிலிருக்கும்
    கண்காணிப்பு
    கேமராக்களை
    அகற்றுவதில் மட்டுமே
    முழுக்கவனம் செலுத்தி...

    * அமைச்சர்களை சந்திக்க
    விடாமலும்
    அடுத்த மேல் சிகிச்சைக்கு
    அயல்நாடு கொண்டு
    செல்ல  அனுமதிக்காமலும்
    ஆக்டோபஸ்
    குடும்பத்தோடு
    அரண் அமைத்து
    கொண்டு
    அம்மா உயிர் பிரியும்
    வரை காத்திருந்து...

    * பிறகென்ன முப்பது நாள்
    முடிவதற்குள் தங்களுக்கு
    முடிசூட்டு விழா நடத்த
    முகூர்த்தம் குறித்தவர்கள்
    அம்மா போலவே
    ஆடை  உடுத்தி
    கொண்டைதரித்து
    ஆயத்தமானவர்கள்....
    ஆட்சியை பிடிக்க

    * மக்கள் திலகமும்
    மகராசி அம்மாவும்
    கண் இமையாய்
    கட்டிக்காத்த கழகத்தை
    கழகத்தின் ஆட்சியை
    கைப்பற்றிக் கொண்டு
    மஞ்சள் குளிக்கலாம் என
    மனக்கணக்கு
    போட்டதெல்லாம்
    மண்ணாகிப் போனாலும்.

    * அடித்த பணத்தை வைத்து
    அத்தனையும் பிடிப்போம்
    என அகங்காரம்
    கொண்டலையும் மாபியா
    கும்பலின் முகமூடிகள்
    ஒவ்வொன்றாய் கிழிகிறது.
    அதில் போலி வீடியோவும்
    ஒன்றென்பது புரிகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #Jayalalithaa  #Sasikala #TTVDhinakaran

    அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழில் டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகம் திறந்திருப்பதை தாக்கி கவிதை வெளியாகியுள்ளது. #TTVDhinakaran #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான நமது  புரட்சித்தலைவி அம்மா நாளிதழில் டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகம் திறந்திருப்பதை தாக்கி வெளியான கவிதை வருமாறு:-

    ஸ்லீப்பர் செல், பேட்டரி செல் என்றெல்லாம் ஊளையிட்டு ஊரை ஏய்த்த நரி ஒன்று இனியும் தனது செப்படி வித்தை சிம்மத்தின் குகைக்குள் செல்லாது என்பது சிந்தையில் உரைக்கவே...

    வெள்ளந்தி சிரிப்புக்குள் வி‌ஷத்தை நிரப்பிய விரியன் பாம்பு...

    இனி ஒரு நாளும் அம்மா கட்டிக்காத்த அவ்வை சண்முகச்சாலை அண்ணா தி.மு.க. ஆலையத்திற்குள் அடியெடுத்து வைக்க முடியாது என்பதை அறிந்து கொண்டு வி‌ஷப் பாம்புகளுக்கென தனிப்புற்று எழுப்பி குடி புகுந்திருக்கு...

    இரு தலை முனியன் எனப்படும் மண்ணுளி பாம்புபோல் மறைந்திருந்து கொண்டு...

    இரு இலை இயக்கத்தின் பெருமை கெடுத்த தறுதலை கூட்டத்திடம் இருந்து ஒருவழியாய் கழகம் தீட்டுக்கழித்து தெளிவு பெற்றுவிட...

    சதிகாரத்தால் குவித்த பணத்தை வட்டிக்கு விட்டால் கூட வருமானம் போதாதென ‘புட்டி’க்கு விட்ட கோல்டன் மிடாஸ் கும்பலின் கொள்ளைக் கூட்டத் தலைவன்...


    டோக்கனை வைத்து வாக்குகளை வளைத்தது மாதிரி ஒன்றரைக் கோடித் தொண்டர்களை விலை பேசி விடலாம் என கனா கண்டதெல்லாம் ஒரு நாளும் கைகூடாது என்பது புத்திக்கு உரைக்கவே புதுக்கடை திறந்திருக்கு...

    அந்த கடை திறப்பையும் லண்டன் ஓட்டல் வழக்கிலிருந்து தன்னை விடுவித்த கருணாநிதிக்கும்...

    ஆர்.கே.நகரில் குக்கர் கொதிக்க எரிபொருளாய் உதவிய சூரியனுக்கும்...

    நன்றி தெரிவிக்கும் விதமாக கருணாநிதி பிறந்த நாளிலேயே கடை திறப்பை நடத்தி இருக்கு...

    எப்படியோ அழுக்கு அகன்றது கணக்கு கேட்டே பிறந்த இயக்கத்தை விட்டு இழுக்கு அகன்றது...

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDhinakaran #ADMK
    ×