என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹவாலா கட்சிக்கு கடை திறந்திருக்கு- தினகரன் மீது அ.தி.மு.க. தாக்கு
Byமாலை மலர்4 Jun 2018 4:19 AM GMT (Updated: 4 Jun 2018 4:19 AM GMT)
அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழில் டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகம் திறந்திருப்பதை தாக்கி கவிதை வெளியாகியுள்ளது. #TTVDhinakaran #ADMK
சென்னை:
அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழில் டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகம் திறந்திருப்பதை தாக்கி வெளியான கவிதை வருமாறு:-
ஸ்லீப்பர் செல், பேட்டரி செல் என்றெல்லாம் ஊளையிட்டு ஊரை ஏய்த்த நரி ஒன்று இனியும் தனது செப்படி வித்தை சிம்மத்தின் குகைக்குள் செல்லாது என்பது சிந்தையில் உரைக்கவே...
வெள்ளந்தி சிரிப்புக்குள் விஷத்தை நிரப்பிய விரியன் பாம்பு...
இனி ஒரு நாளும் அம்மா கட்டிக்காத்த அவ்வை சண்முகச்சாலை அண்ணா தி.மு.க. ஆலையத்திற்குள் அடியெடுத்து வைக்க முடியாது என்பதை அறிந்து கொண்டு விஷப் பாம்புகளுக்கென தனிப்புற்று எழுப்பி குடி புகுந்திருக்கு...
இரு தலை முனியன் எனப்படும் மண்ணுளி பாம்புபோல் மறைந்திருந்து கொண்டு...
இரு இலை இயக்கத்தின் பெருமை கெடுத்த தறுதலை கூட்டத்திடம் இருந்து ஒருவழியாய் கழகம் தீட்டுக்கழித்து தெளிவு பெற்றுவிட...
டோக்கனை வைத்து வாக்குகளை வளைத்தது மாதிரி ஒன்றரைக் கோடித் தொண்டர்களை விலை பேசி விடலாம் என கனா கண்டதெல்லாம் ஒரு நாளும் கைகூடாது என்பது புத்திக்கு உரைக்கவே புதுக்கடை திறந்திருக்கு...
அந்த கடை திறப்பையும் லண்டன் ஓட்டல் வழக்கிலிருந்து தன்னை விடுவித்த கருணாநிதிக்கும்...
ஆர்.கே.நகரில் குக்கர் கொதிக்க எரிபொருளாய் உதவிய சூரியனுக்கும்...
நன்றி தெரிவிக்கும் விதமாக கருணாநிதி பிறந்த நாளிலேயே கடை திறப்பை நடத்தி இருக்கு...
எப்படியோ அழுக்கு அகன்றது கணக்கு கேட்டே பிறந்த இயக்கத்தை விட்டு இழுக்கு அகன்றது...
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDhinakaran #ADMK
அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழில் டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகம் திறந்திருப்பதை தாக்கி வெளியான கவிதை வருமாறு:-
ஸ்லீப்பர் செல், பேட்டரி செல் என்றெல்லாம் ஊளையிட்டு ஊரை ஏய்த்த நரி ஒன்று இனியும் தனது செப்படி வித்தை சிம்மத்தின் குகைக்குள் செல்லாது என்பது சிந்தையில் உரைக்கவே...
வெள்ளந்தி சிரிப்புக்குள் விஷத்தை நிரப்பிய விரியன் பாம்பு...
இனி ஒரு நாளும் அம்மா கட்டிக்காத்த அவ்வை சண்முகச்சாலை அண்ணா தி.மு.க. ஆலையத்திற்குள் அடியெடுத்து வைக்க முடியாது என்பதை அறிந்து கொண்டு விஷப் பாம்புகளுக்கென தனிப்புற்று எழுப்பி குடி புகுந்திருக்கு...
இரு தலை முனியன் எனப்படும் மண்ணுளி பாம்புபோல் மறைந்திருந்து கொண்டு...
இரு இலை இயக்கத்தின் பெருமை கெடுத்த தறுதலை கூட்டத்திடம் இருந்து ஒருவழியாய் கழகம் தீட்டுக்கழித்து தெளிவு பெற்றுவிட...
சதிகாரத்தால் குவித்த பணத்தை வட்டிக்கு விட்டால் கூட வருமானம் போதாதென ‘புட்டி’க்கு விட்ட கோல்டன் மிடாஸ் கும்பலின் கொள்ளைக் கூட்டத் தலைவன்...
அந்த கடை திறப்பையும் லண்டன் ஓட்டல் வழக்கிலிருந்து தன்னை விடுவித்த கருணாநிதிக்கும்...
ஆர்.கே.நகரில் குக்கர் கொதிக்க எரிபொருளாய் உதவிய சூரியனுக்கும்...
நன்றி தெரிவிக்கும் விதமாக கருணாநிதி பிறந்த நாளிலேயே கடை திறப்பை நடத்தி இருக்கு...
எப்படியோ அழுக்கு அகன்றது கணக்கு கேட்டே பிறந்த இயக்கத்தை விட்டு இழுக்கு அகன்றது...
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDhinakaran #ADMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X