search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muzaffarpur Shelter Home"

    பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை எந்த வடிவத்திலும் வெளியிட கூடாது என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #MuzaffarpurShelterHome
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகளை வெளியிட பாட்னா ஐகோர்ட் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா அமர்வு இன்று விசாரித்தது.

    வழக்கு விசாரணையை அடுத்து, பாட்னா ஐகோர்ட் விதித்த தடையை நீக்கிய நீதிபதிகள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை எந்த வடிவத்திலும் வெளியிட கூடாது என கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தனர். 
    பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா, அவரது கணவர் சந்திர சேகர் ஆகியோர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Muzaffarpurshelterhome #Manjuvarma
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர் பூரில் ஒரு காப்பகத்தில் தங்கியிருந்த 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர். இது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.



    அதைதொடர்ந்து நடந்த விசாரணையில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. அவருக்கு பீகார் சமூக நலத்துறை மஞ்சு வர்மாவும், அவரது கணவர் சந்திரசேகரும் அடைக்கலம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும் மஞ்சுவர்மாவின் கணவர் சந்திரசேகருடன் பிரஜேஷ் தாக்கூர் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 17 தடவை டெலிபோனில் பேசியதும் உறுதி செய்யப்பட்டது. எனவே மஞ்சுவர்மா மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து சி.பி.ஐ. தனது விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

    இந்தநிலையில் பாட்னாவில் உள்ள மஞ்சுவர்மா, பெகுசாரை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ள அவரது மருமகன் அர்ஜூன் தோலாவுக்கு சொந்தமான வீடுகள் உள்பட 12 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது மருமகன் அர்ஜூன் தோலா வீட்டில் இருந்து 50 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை பல்வேறு துப்பாக்கிகளுடன் தொடர்புடையவை. இந்த தகவலை செரிய பரியாபூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் ரஜாக் தெரிவித்தார். ஆனால் அவரது மருமகன் பெயரை வெளியிட மறுத்துவிட்டார்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் பெண் மந்திரி மஞ்சுவர்மா, அவரது கணவர் சந்திரசேகர் ஆகியோர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் மற்றொரு முன்னாள் சமூகநலத்துறை மந்திரி தாமோதர் ரவாத்திடமும் சி.பி.ஐ. போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். இவருக்கும் கற்பழிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி பிரஜேஷ் தாக்கூருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது அதைதொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாமோதர் ரவாத்தின் மகன் ராஜிவ் ரவாத் நீக்கப்பட்டார்.  #Muzaffarpurshelterhome #Manjuvarma


    பீகாரில் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த மேலும் 5 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டது மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது. #CBIinvestigation #abuseofminorgirls #MuzaffarpurShelterHome
    முசாபர்பூர்:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மாநில அரசு உதவி பெறும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 4 வயது முதல் 18 வயது வரையுள்ள பேச்சு குறைபாடு கொண்ட 44 சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த சிறுமிகளில் பலரை இல்லத்தின் உரிமையாளரும், பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பது, மும்பையைச் சேர்ந்த டாடா சமூக அறிவியல் நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய தணிக்கையில் தெரிய வந்தது. இது தொடர்பாக பீகார் மாநில சமூக நலத்துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.



    இதையடுத்து பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 42 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக 29 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது, உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் முசாபர்பூர் போலீசார் பாதுகாப்பு இல்லத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாகூர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்தார். அதன்படி இந்த வழக்கை சி.பி.ஐ. நேற்று கையில் எடுத்துக் கொண்டது.

    இந்த நிலையில், இரண்டாம் கட்ட மருத்துவ அறிக்கையில் மேலும் 5 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது, நேற்று தெரிய வந்தது. இதனால் பாதுகாப்பு இல்லத்தில் காமுகர்களால் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்தது.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார்.

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “நாட்டில் ஆட்சி நிர்வாகம் மேம்பட்டு இருப்பதாக பெருமையுடன் கூறிக் கொள்பவர்கள், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை வெறும் கோஷமாகவே வைத்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.  #CBIinvestigation #abuseofminorgirls #MuzaffarpurShelterHome
    ×