search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murugan temple devotees"

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இரணியல் பகுதியில் இருந்து காவடி ஊர்வலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழாவில் இரணியல், திங்கள்நகர், குளச்சல், புதுக்கடை, மணவாளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று கலந்து கொள்வார்கள்.

    இதைத்தொடர்ந்து இரணியல் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் 41 நாள் விரதம் இருந்து வருகிறார்கள். மேலும் புஷ்பக்காவடி, தேர் காவடி, எண்ணைக்காவடி, பறவைக்காவடி உள்பட பல்வேறு காவடிகளை எடுத்துச் செல்வார்கள். அவர்கள் காவடி எடுத்த படி திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக பயணமாவார்கள். பல பக்தர்கள் வாகனங்கள் மூல மும் சென்று திருச்செந்தூர் கோவிலில் வழிபடுவார்கள்.

    இதைத்தொடர்ந்து காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள் தங்கள் காவடிகளை பூஜையில் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் இந்த காவடி பூஜைகள் நடந்து வருகிறது. இன்றும் காவடி பூஜை நடைபெற்றது. இன்று இரவு காவடி அலங்காரமும் நடைபெறும்.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு காவடிகளுக்கு தீபாராதனை காட்டப்படும். அதன் பிறகு தெருக்களில் காவடி ஊர் மாறான் பரம்பு, காட்டுவிளை ஆகிய பகுதிகளில் இருந்தும் பறக்கும் காவடி, அக்னிக் காவடி, தேர் காவடியுடன் பக்தர்கள் திருச்செந்தூருக்கு செல்வார்கள். இந்த ஆண்டு கிரேன் காவடிக்கு போலீசார் தடை விதித்து உள்ளதால் பக்தர்கள் கிரேன் காவடி எடுக்கவில்லை. காவடி ஊர்வலத்தை தொடர்ந்து செக்காலத் தெருவில் காளைகள் மூலம் கல்செக்கில் எள் மூலம் நல் எண்ணெய் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து அமெரிக்க பக்தர்கள் அரோகரா கோ‌ஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி கோவிலில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து அமெரிக்க பக்தர்கள் அரோகரா கோ‌ஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசமும், பங்குனி உத்திர திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வரும் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் தற்போதே பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர்.

    அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் டக்ளஸ் புரூக்ஸ். இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். சமஸ்கிருதம் மற்றும் இந்துத்துவம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு போதித்து வருகிறார்.

    தமிழ் கடவுளான முருகப் பெருமான் மீது பக்தி கொண்ட இவர் ஒவ்வொரு ஆண்டும் அங்குள்ள நண்பர்களுடன் பழனி கோவிலுக்கு வருவது வழக்கம்.

    முருகப் பெருமான் மீது கொண்ட பற்று காரணமாக தனது பெயரை சுந்தரமூர்த்தி என மாற்றிக் கொண்டார். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுந்தரமூர்த்தி நியூயார்க் நகரைச் சேர்ந்த 18 பேருடன் சென்னை வந்தார்.

    பின்னர் அங்கிருந்து தனது நண்பர் ஜெகன்நாத்பாபு என்பவரை வழிகாட்டியாக கொண்டு பழனி கோவிலுக் வந்தார். இதில் ஆண்கள் அனைவரும் பட்டு வேட்டி, பட்டு சட்டையும் பெண்கள் பட்டுச் சேலையும் அணிந்து இந்திய பாரம்பரிய முறைப்படி வந்தனர்.

    உச்சிகால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த அவர்கள் அரோகரா கோ‌ஷம் எழுப்பி வழிபட்டனர். அமெரிக்கர்கள் அரோகரா கோ‌ஷம் எழுப்பியதை பார்த்து கோவிலில் இருந்த பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர். முன்னதாக இவர்களுடன் வந்த பேர்கிளாத் என்ற பெண் பக்தர் மயில் காவடி எடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். கோவில் நிர்வாகம் சார்பில் அளித்த திருநீரையும் நெற்றியில் பூசிக் கொண்டனர். அதன் பின்னர் திருப்பரங்குன்றம் செல்லப் போவதாக கூறி விட்டு சென்றனர்.
    ×