search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother and daughter death"

    ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட தாய்-மகள் பலியான சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருநாளூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவரது மனைவி தாமரை செல்வி (33). இவர்களது மகள் தர்ஷினி (12). சேகரும், தாமரைசெல்வியும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.

    இதனால் தர்ஷினி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவனத்தான்கோட்டையில் உள்ள அவரது பாட்டி பானுமதி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தாமரைச்செல்வி அவரது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காணும் பொங்கலையொட்டி ஆட்டு இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிட்டனர். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் தாமரைசெல்விக்கும், தர்ஷினிக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பானுமதி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.


    இருப்பினும் சிகிச்சை பலனின்றி தர்ஷினி இறந்தாள். தாமரைசெல்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , மகள் இறந்ததை அறிந்து கதறி துடித்தார்.

    தர்ஷினி உடலை அவரது உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது தாமரைச்செல்வியும் உடன் சென்றார். போகும் வழியில் திடீரென தாமரைச் செல்வியும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தாய்-மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட பிறகே இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட் டுள்ளது. மேலும் தலைக்கறியை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

    இதனால் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்த வியாபாரி பழைய இறைச்சியை விற்பனை செய்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா? அல்லது ஏதாவது கலப்படம் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சியை வாங்கி சாப்பிட்டதன் காரணமாக இறந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் சமைத்து சாப்பிட்ட ஆட்டு இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட தாய்-மகள் பலியான சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பொங்கல் பண்டிகை மறு நாளான கரிநாள் அன்று அறந்தாங்கி பகுதியில் ஆட்டு இறைச்சி அதிக அளவில் விற்பனையானது. பொதுமக்கள் பலர் போட்டி போட்டு வாங்கினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வியாபாரிகள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆட்டு இறைச்சியை, புதிதாக வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்திருக்கலாம் என போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அறந்தாங்கி பகுதியில் உள்ள ஆட்டு இறைச்சி கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    தருமபுரி அருகே வீட்டில் தாய்-மகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் குண்டலஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பழனி. கிரேன் ஆபரேட்டர். இவருக்கும் கிருஷ்ணா புரம் புழுதிகரை காட்டுக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி திவ்யா லட்சுமி (16), சுவேதா என்ற மகள்களும், சச்சின் என்ற மகனும் உள்ளனர். 

    பழனி மகேஸ்வரியுடன் காட்டு கொட்டாயில் தனியாக வீடு கட்டி வாழ்ந்து வந்தார். பழனி வேலை காரணமாக வெளியூருக்கு சென்றுவிட்டார். சுவேதாவும், சச்சினும் வீட்டின் அருகே உள்ள தாத்தா மாதன் வீட்டிற்கு சென்றுவிட்டனர். வீட்டில் மகேஸ்வரியும், திவ்யா லட்சுமி மட்டும் இருந்தனர்.

    இன்று காலை நீண்ட நேரமாகியும் 2 பேரும் வெளியே வராததால் மாதன் மகேஸ்வரி வீட்டின் கதவை தட்டினார். அப்போது கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது அங்கு பேத்தி திவ்யா லட்சுமி தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அதன் அருகே மகேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட மாதன் 2 பேரின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மகேஸ்வரி குடும்ப தகராறு காரணமாக மகளை தீ வைத்து கொன்று விட்டு தூக்குபோட்டு கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாலக்காடு அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தாய், மகள் பலியாயினர். சிறுமிகள் உள்பட 3 பேர படுகாயம் அடைந்துள்ளனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒலவக்கோடு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மனைவி பார்வதி (வயது 50). பார்வதியின் உறவினர் மன்னார்காட்டில் உள்ளனர். அவர்களது புதுமனை புகுவிழாவுக்கு அழைப்பு விடுத்தனர்.

    விழாவில் கலந்து கொள்ள பார்வதியின் மகள் சுஜிதா (30). மருமகன் சுதீஷ் (30). பேத்தி ஆரதியா மற்றும் உறவினர் ஆரியா (15) ஆகியோருடன் ஆட்டோவில் நேற்று புறப்பட்டார். ஆட்டோவை மருமகன் சதீஷ் ஓட்டினார்.

    மன்னார்காட்டில் நடந்த விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் மாலை வீட்டுக்கு புறப்பட்டனர். ஆட்டோ கரிம்பா அருகே வந்தபோது எதிரே பாலக்காட்டில் இருந்து மன்னார்காட்டுக்கு கேரள அரசு பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கூடுபோல் நொறுங்கியது.

    ஆட்டோவில் இருந்த அனைவரும் படுகாயம் அடைந்து அலறி சத்தம் போட்டனர். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தாய் பார்வதி, மகள் சுஜிதா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். படுகாயத்துடன் முதலுதவி சிகிச்சை பெற்ற சுதீஷ், ஆரதியா, ஆரியா ஆகியோர் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து கல்லடிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×