search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money supply"

    திருப்பத்தூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் நாளை நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மது பாட்டில்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்களின் கண்காணிப்பையும் மீறி பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் திருப்பத்தூர் அருகே உள்ள காக்கனாம் பாளையம் பகுதியில் தேர்தல் உதவி ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.27 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் மரிமாணிகுப்பம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்த காளியப்பன், கோபி ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் பணம் வினியோகம் செய்த 3 பேரையும் குறிசிலாபட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆளும் கட்சி சார்பில் ஊழியர்கள் கூட்டம் என்ற பெயரில் பணம் வினியோகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். #admk #kbalakrishnan

    ஈரோடு:

    ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளா கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை எதிர்த்து ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் கிளர்ந்து எழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரு பக்கம் காவல் துறையின் மெத்தனமும் தவறும் இருக்கிறது.

    சமூக வலைதளங்களில் ஏராளமான ஆபாச படங்கள் வருகின்றன. இது ஒட்டு மொத்த சமூகத்தையே பாழ்படுத்தி விடும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    விவசாயிகளை கைது செய்வதற்கு போலீசார் காட்டும் ஆர்வத்தை பொள்ளாச்சி பாலியல் வழக்கில்ஆர்வம் காட்டாதது ஏன்?. பொள்ளாச்சி சம்பவம் நடந்து தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான பெற்றோர்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அது அடங்காத நிலையில் கோவையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அந்த வழக்கில் இன்னும் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வில்லை. பாலியல் வன்முறை, சமூக விரோத சக்திகளில் ஈடுபடும் குற்ற வாளிகளை அரசு பாதுகாக்கிறது.

    ஜனநாயக உரிமைக்காக போராட கூடியமக்களையும் விவசாயிகளையும் தொழி லாளர்களையும் அடக்கு முறைகளை ஏவி அடக்குகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். நியாயமான உரிமைக்காக போராட கூடிய விவசாயிகள் மீது வழக்குப் போடுகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளுக்கும், 18 சட்ட மன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாளை உச்ச நீதிமன்றத்தில் மீதமிருக்கும் 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் 4வது தொகுதியாக சூலூர் தொகுதியையும் சேர்த்து மே மாதம் 13-ந் தேதிக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தை கேட்டு கொள்கிறேன்.

    ஆளும் கட்சி சார்பில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாக்காளர்களுக்கு ஊழியர் கூட்டம் என்ற பெயரில் வழங்க ஆரம்பித்து விட்டார்கள். பல இடங்களில் பணம் வினியோகிப்பதை வாட்ஸ்- அப் மூலமாக படம் வந்திருக்கிறது.

    ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன தான் ஆளுங் கட்சியினர் பண விநியோகம் செய்தாலும், வரம்பு மீறி சலுகைகள் அளித்தாலும் இந்த முறை வாக்காளர்களை பொறுத்தவரை பாஜக- அதிமுக கூட்டணியை தோற்கடிப்பது என்ற உறுதியான நிலைப்பாட்டை மக்கள் எடுத்திருக்கிறார்கள்.

    முகிலன் காணாமல் போய் 1½ மாதங்கள் ஆகி இருக்கிறது. அவர் இருக்கிறாரா இல்லையா? என்பதே சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. உடனடியாக முகிலனை கண்டுபிடித்து காவல் துறையினர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்ப டைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #admk #kbalakrishnan

    ×