என் மலர்
நீங்கள் தேடியது "MK Stalins"
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் வீடு திரும்பினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.
மாநிலங்களவையில் புதிதாக தேர்வான எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி நடைபெற்றது.
அப்போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேல்சபையின் எம்.பியாக, தமிழில் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்.
இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலை சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், சிகிச்சைகள் முடிந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் வீடு திரும்பினார்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் எம்.பி. சந்தித்துள்ளார்.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
- புலவர் நன்னன் எழுதிய 124 புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்படும்.
- வாழ்நாள் எல்லாம் நாட்டுக்காக, மொழிக்காக பாடுபடுவது முக்கியமானது.
சென்னை தி.நகரில் எழுத்தாளர் மா.நன்னன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.
இந்நிலையில், புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன்.
அவற் மறைந்த பிறகும், புத்தகம் அவரது பெயரால் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால், எழுத்தால், சிந்தனையால், செயலால் அவர் வாழ்கிறார். 124 புத்தகங்களை நமக்காக உருவாக்கியுள்ளார்.
தனக்கென ஒரு எழுத்து நடையை, பேச்சு நடையை நன்னன் வைத்திருந்தார். பிழையின்றி எழுதுவதையும், பிழையின்றி பேசுவதையும் கற்பிக்கக்கூடிய ஆசானாக இருந்தார்.
புலவர் நன்னன் எழுதிய 124 புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்படும்.
வாழ்நாள் எல்லாம் நாட்டுக்காக, மொழிக்காக பாடுபடுவது முக்கியமானது.
பெரியார், கருணாநிதி, நன்னன் உள்ளிட்டோர் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக பாடுபட்டவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






