search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Senji Mastan"

    • சிறுபான்மை பள்ளிகளுக்கு கடந்த வருடங்களில் வழங்கப்பட்டு வந்த சில நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
    • அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் அந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.

    நெல்லை:

    சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நெல்லை வந்தார்.

    ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. மனு

    அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொரு ளாளரும், நாங்கு நேரி சட்டமன்ற உறுப்பின ருமான ரூபி மனோகரன் நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சிறுபான்மை பள்ளி களுக்கு கடந்த வருடங்களில் வழங்கப்பட்டு வந்த சில நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அரசு பள்ளிகளில் வழங்கப்படுவது போல அனைத்து அரசு நலத்திட்ட ங்களையும் சிறுபான்மை பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

    7.5 சதவீத இடஒதுக்கீடு

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை போல, நீதியரசர் கலையரசன் பரிந்துரைப்படி அதை 15 சதவீதமாக உயர்த்தி, அதில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    புதுமை பெண் திட்டம்

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் புதுமை பெண் திட்டத்தின் மூலம் பயன் பெறுவது போல, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் அந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.

    இதுவரை அரசால் மதிய உணவு திட்டம் அரசு பள்ளி மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி களிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டமானது, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட வில்லை. எனவே அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் பயன்பெறும் வகையிலும் அந்த திட்டத்தை விரிவு படுத்திட வேண்டும்.

    உதவித்தொகை

    கடந்த 16 ஆண்டுகளாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஒன்றிய அரசால் வழங்கப் பட்டு வந்த சிறுபான்மை மாண வர்களின் கல்வி உதவித்தொகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை வழங்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

    நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மை பள்ளிகளில் தகுதியான காலி இடங்களில் முறையான விதிமுறைகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்க ளுக்கு கடந்த 6 ஆண்டுகளாக அரசு ஒப்புதல் வழங்காத காரணத்தினால், அவர்கள் ஊதியம் பெறாமலேயே ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கல்வித் துறை நியமன ஒப்புதல் வழங்கி அவர்களுக்கு ஊதியம் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடு கட்டி தரப்படவுள்ளது.
    • அக்னிபாத் திட்டம் என்பது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிலையை உருவாக்குவதாக சொல்லி, நெருப்பில் நடக்கின்ற மாதிரியான சூழலை உருவாக்கி உள்ளனர்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடு கட்டி தரப்படவுள்ளது.

    இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சமூக நலன், மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தாப்பாத்தி முகாமில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்‌.

    பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் 106 இலங்கை மறுவாழ்வு முகாமில் வசிக்கக் கூடிய மக்களுக்கு புதியதாக வீடு கட்டித்தரும் திட்டத்தினை ரூ. 317 கோடியில் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி முகாமில் உள்ள மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    நாட்டின் முதுகெலும்பு விவசாயம். அந்த விவசாயிகள் கருத்துக்கு முரண்பட்டதாக வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தனர். ஆண்டுக்கணக்கில் விவசாயிகள் ஒரே இடத்தில் தொடர்ந்து போராடினார்கள். பல விவசாயிகள் உயிர் நீத்தனர். அதன் பின்னர் தான் ஒன்றி அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது.

    அக்னிபாத் திட்டம் என்பது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிலையை உருவாக்குவதாக சொல்லி, நெருப்பில் நடக்கின்ற மாதிரியான சூழலை உருவாக்கி உள்ளனர்.

    இத்திட்டத்திற்கு எதிராக விவரமறிந்த இளைஞர்கள் போராடி வருகின்றனர்.விவரம் அறியாத இளைஞர்கள் போராடவில்லை.

    மாணவர்கள் நினைத்தால் முடித்து காட்டுவார்கள் என்று தமிழகத்தில் ஏற்கனவே ஒரு வரலாறு படைத்தது இருக்கிறார்கள். அது இந்தியா அளவில் படைப்பதற்காக மாணவர்கள் மத்தியில் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×