search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister MP Saminathan"

    • தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமி நாதனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
    • பெருமாள்சாமியின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தந்தை முத்தூர். சா.பெருமாள்சாமி மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதனின் அருமைத் தந்தை முத்தூர்.சா.பெருமாள்சாமி மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.

    தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமி நாதனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது இறுதி மூச்சுவரை உழவராக வாழ்ந்ததைக் குறிப்பிட்டார். பெருமாள்சாமியின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சராக உள்ளவர் மு.பெ. சாமிநாதன்.
    • அமைச்சரின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    திருப்பூர்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை சா.பெருமாள் சாமி கவுண்டர் காலமானார்.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சராக உள்ளவர் மு.பெ. சாமிநாதன். இவர் திருப்பூர் மாவட்டம் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை சா. பெருமாள் சாமி கவுண்டர் (94). தாயார் தங்கமணி. இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தாயார் தங்கமணி இறந்தார்.

    இதற்கிடையே சா.பெருமாள் சாமி கவுண்டர் வயது மூப்பு காரணமாக கடந்த 3 நாட்களாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.50 மணி அளவில் இறந்தார். அமைச்சரின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 1081 பள்ளிகளில் 75,482 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.
    • முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சி சின்ன முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், விரிவாக்கம் செய்யப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 1081 பள்ளிகளில் 75,482 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் மாநகரில் உள்ள 120 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 26,079 மாணவ மாணவிகளுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தினை திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நொய்யல் வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். 15 வேலம்பாளையம் அரசு பள்ளியில் மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுப்பராயன் எம்.பி., மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், மண்டல தலைவர் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×