search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Interview"

    • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம்குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • மழைநீர் வடிகால் கால்வாய் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    விழுப்புரம்:

    உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. கலெக்டர் பழனி ஆகியோர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன்,புகழேந்தி ஆகியோர் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலாமேடு மற்றும் மின் வாரிய குடியிருபபு காலனி, ஆகிய பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம்குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் நகராட்சிகள் அனைத்திலும் அடிப்படை கட்டமைப்புகள் உயர் தொழில்நுட்ப வசதிகளோடும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில், விழுப்புரம் நகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட 5 ஊராட்சி பகுதிகளில் ரூ.263 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 165.686 கி.மீ நீளத்திற்கு கழிவுநீர் குழாய் பதித்தல், 7018 பழுது நீக்குவதற்கான நுழைவு தொட்டி, 3 பிரதான கழிவு நீரேற்று நிலையம், 7 கழிவுநீர் உந்து நிலையம், 7 கழிவுநீர் உந்து மனித ஆள்நுழைவு தொட்டி, 17 பம்ப் ஹவுஸ், 17.90 கி.மீ நீளத்திற்கு பம்பிங் மெயின், 14,150 வீட்டு இணைப்புகள் போன்ற பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    விழுப்புரம் நகராட்சி க்குள்ளாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளில் சில இடர்பாடுகள் உள்ளதால்நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர்கே.என்.நேரு விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தபோது அரசுத்துறை அலுவலர்களுடன் கலந்துரையாடி பொதுமக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம் நகராட்சி சிறப்பு நிலை அந்தஸ்து பெற்றுள்ளதால், நகராட்சிக்கு தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் விரைந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்றியமையாததாக உள்ளதால், அனைவரின் ஒத்துழைப்போடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

    தொடர்ந்து, விழுப்புரம், அண்ணா மலை பல்கலைக்கழக இடைநிலை விரிவாக்க கல்வி மையத்தில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், தமிழ்நாட்டில், வருகிற கல்வியாண்டில் அனைத்து கல்லூரி களிலும் ஒரே வகையான கட்டணங்கள் நிர்ணயிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, விழுப்புரம் ஆர்.டி.ஒ .ரவிச்சந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் அன்பழகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைப்பது சரியானது இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
    • தி.மு.க.வின் முப்பெரும் விழா ஸ்டாலினின் புகழ் பாடும் விழாவாக அமைந்ததாக தெரிவித்தார்.

    மதுரை

    மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2.25 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு பேரிடியாக உள்ளது. மதுரைக்கு டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்தது விளம்பர அறிவிப்பு, கள ஆய்வு நடத்தாமல் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

    மதுரையில் ஏற்கனவே எல்காட் மூலம் உள்ள 2 தகவல் தொழில்நுட்ப பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல, அடிப்படை கட்டமைப்பு இல்லாத இடத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்காமல் டைடல் பார்க் அறிவி க்கப்பட்டுள்ளது,

    கண்ணின் பார்வையை அழித்து விட்டு ராஜபார்வை என சொல்லவது போல டைடல் பார்க் அறிவிப்பு உள்ளது. தி.மு.க.வின் முப்பெரும் விழா ஸ்டாலினின் புகழ் பாடும் விழாவாக அமைந்தது, டைடல் பார்க் கட்டுவது சிறுவர் பூங்கா அமைப்பது போல அல்ல, அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கி டைடல் பார்க் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து உரிய நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
    • எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்துக்கு மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என் பது குறித்து போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்: 

    கடலூர் அருகே எம்.புதூர் பட்டாசு ஆலைவெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கும், படுகாய மடைந்தவர்களுக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  

    எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்துக்கு மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என் பது குறித்து போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உரிமம் பெற்று பட்டாசு ஆலை இயங்கியதா?, உரிமம் இன்றி இயங்கி யதா? என்பது குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×