search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே கல்வி கட்டணம் அமைச்சர் பொன்முடி பேட்டி
    X

    விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மின்வாரிய காலனியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் பழனி, எம்.எல்.ஏக்கள் பகழேந்தி, டாக்டர் லட்சுமணன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு உள்ளனர்.

    வருகிற கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே கல்வி கட்டணம் அமைச்சர் பொன்முடி பேட்டி

    • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம்குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • மழைநீர் வடிகால் கால்வாய் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    விழுப்புரம்:

    உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. கலெக்டர் பழனி ஆகியோர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன்,புகழேந்தி ஆகியோர் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலாமேடு மற்றும் மின் வாரிய குடியிருபபு காலனி, ஆகிய பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம்குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் நகராட்சிகள் அனைத்திலும் அடிப்படை கட்டமைப்புகள் உயர் தொழில்நுட்ப வசதிகளோடும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில், விழுப்புரம் நகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட 5 ஊராட்சி பகுதிகளில் ரூ.263 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 165.686 கி.மீ நீளத்திற்கு கழிவுநீர் குழாய் பதித்தல், 7018 பழுது நீக்குவதற்கான நுழைவு தொட்டி, 3 பிரதான கழிவு நீரேற்று நிலையம், 7 கழிவுநீர் உந்து நிலையம், 7 கழிவுநீர் உந்து மனித ஆள்நுழைவு தொட்டி, 17 பம்ப் ஹவுஸ், 17.90 கி.மீ நீளத்திற்கு பம்பிங் மெயின், 14,150 வீட்டு இணைப்புகள் போன்ற பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    விழுப்புரம் நகராட்சி க்குள்ளாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளில் சில இடர்பாடுகள் உள்ளதால்நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர்கே.என்.நேரு விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தபோது அரசுத்துறை அலுவலர்களுடன் கலந்துரையாடி பொதுமக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம் நகராட்சி சிறப்பு நிலை அந்தஸ்து பெற்றுள்ளதால், நகராட்சிக்கு தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் விரைந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்றியமையாததாக உள்ளதால், அனைவரின் ஒத்துழைப்போடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

    தொடர்ந்து, விழுப்புரம், அண்ணா மலை பல்கலைக்கழக இடைநிலை விரிவாக்க கல்வி மையத்தில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், தமிழ்நாட்டில், வருகிற கல்வியாண்டில் அனைத்து கல்லூரி களிலும் ஒரே வகையான கட்டணங்கள் நிர்ணயிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, விழுப்புரம் ஆர்.டி.ஒ .ரவிச்சந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் அன்பழகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×