search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahishasuramarthini Decoration"

    • மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா.
    • இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும்

    தூத்துக்குடி:

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சியில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    6-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இ்க்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஏராளாமான பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.

    7-ம் திருநாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 6.30 மணி வரை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதி வந்தார். மாலை 4.30 மணிக்கு மகிஷாசுரன் வீதி உலா நடைபெற்றது. மாலை 4 மணி முதல் 8 மணி வரை சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×