search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MA Chidambaram Stadium"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பெவிலியன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி திறந்து வைக்கிறார்.
    • இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி பங்கேற்கிறார்.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், ஐ.பி.எல். உள்ளூர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்காக சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலியன் பகுதி இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் அறை, அலுவலகங்கள், ரசிகர்கள் அமரும் இடம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டன.

    சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பெவிலியன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி திறந்து வைக்கிறார். இதற்கான விழா அன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐ.சி.சி. சேர்மனும் இந்திய கிரிக்கெட் சங்க தலைவருமான என்.சீனிவாசன், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டேன்டிற்கு (இருக்கை பகுதி) முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்படுகிறது. அந்த ஸ்டேடியத்திற்கு 'கலைஞர் கருணாநிதி ஸ்டேன்டு' என்று பெயர் சூட்டப்படுகிறது. சேப்பாக்கம் எம்.ஏ.ஸ்டேடியத்தில் உள்ள அண்ணா பெவிலியனை கருணாநிதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி வருகிற 22-ந் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் புதிய ஸ்டான்டுகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனுக்கு பிறகு இந்தியாவில் 2-வது மிக பழமையான கிரிக்கெட் மைதானம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×