search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "low marks"

    ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் வீட்டைவிட்டு வெளியேறி மாயமான மாணவி கோட்டீஸ்வரியை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (வயது 19). பிளஸ்-2 படித்துள்ள இவர் ஏற்கனவே ஒருமுறை ‘நீட்’ தேர்வு எழுதினார். அதில் பெற்ற மார்க் அடிப்படையில், பல் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கான இடம் கிடைத்தது.

    ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது மீண்டும் ‘நீட்’ தேர்வு எழுதினார். கடந்த முறையைவிட இப்போது குறைவான மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் முதல் மாணவி கோட்டீஸ்வரியை காணவில்லை. பெற்றோர் அவரை தேடினார்கள். தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து மாணவி கோட்டீஸ்வரியை தேடி வருகிறார்.

    இந்தநிலையில், கோட்டீஸ்வரி செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் தனது பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளார். “நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளதால் நான் வீட்டைவிட்டு வெளியேறி வந்துவிட்டேன். என்னை யாரும் தேடாதீர்கள்” என்று அவர் எஸ்.எம்.எஸ் தகவலில் குறிப்பிட்டுள்ளார். அவர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் ஏறி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகர் புது நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக உள்ளார். இவருடைய மனைவி விஜயா. இவர் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு பிரியங்கா(வயது 17) என்ற மகளும் இருந்தார். இவர், சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள மூங்கில் பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவி பிரியங்கா தேர்ச்சி பெற்றார். ஆனால் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று இருந்தார். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.

    மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த தியாகராஜன், தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி பிரியங்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த எம்.கே.பி.நகர் போலீசார், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் மாணவி பிரியங்காவுக்கும், அவருடன் படித்த சக மாணவிகளுக்கும் இடையே பிளஸ்-2 பொதுத்தேர்வில் யார் அதிக மதிப்பெண்கள் பெறுவது? என்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டதாகவும், அதில் சக மாணவிகளை விட பிரியங்கா குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும் தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த அவர், தனது தாயிடம் கூறி அழுது உள்ளார். அதன்பிறகே இந்த மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 
    ×