search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry bike accident"

    சுரண்டையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.
    சுரண்டை:

    சுரண்டை வரகுணராமபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது 45). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த பால்சாமி (50) என்பவருடன் பரங்குன்றாபுரத்தில் உள்ள நண்பரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் சுரண்டை இலந்தைகுளத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மணல் லாரி பைக் மீது மோதியது. இதில் மாடசாமியும், பால்சாமியும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு தென்காசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் நேசமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    லாரி மீது பைக் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னே கணவன் துடிதுடித்து உயிரிழந்தார்.

    தாடிக்கொம்பு:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது 36). இவர் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். திண்டுக்கல்லில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் வந்தார்.

    மீண்டும் ஒட்டன்சத்திரம் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர். தாடிக்கொம்பு அருகே உள்ள அழகு சமுத்திரப்பட்டியில் சென்று கொண்டு இருந்தபோது முன்னால் நின்று கொண்டு இருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.

    இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி மடியிலேயே உயிரை விட்டார். இதைப்பார்த்ததும் அவர் கதறி துடித்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    4 வழிச்சாலையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக அந்த லாரி நின்றதும் அதன் மீது வேகமாக மோதியதுமே விபத்துக்கு காரணமாக அமைந்தது. மேலும் பைக்கை ஓட்டி வந்த கிருஷ்ணமூர்த்தி ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×