search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுரண்டையில் பைக் மீது லாரி மோதி 2 பேர் படுகாயம்- டிரைவர் கைது
    X

    சுரண்டையில் பைக் மீது லாரி மோதி 2 பேர் படுகாயம்- டிரைவர் கைது

    சுரண்டையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.
    சுரண்டை:

    சுரண்டை வரகுணராமபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது 45). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த பால்சாமி (50) என்பவருடன் பரங்குன்றாபுரத்தில் உள்ள நண்பரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் சுரண்டை இலந்தைகுளத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மணல் லாரி பைக் மீது மோதியது. இதில் மாடசாமியும், பால்சாமியும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு தென்காசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் நேசமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×