search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "looting incident"

    பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 35). இவர் கண்காணிப்பு கேமரா பொருத்தும் தொழில் செய்து வருகிறார். தொழில் சம்பந்தமாக பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் கணபதி நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் மேல் தளத்தில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

    கிறிஸ்தவரான இவர் தனது மனைவி ஜெனிபர் மற்றும் மகன் சுஜன் ஆகியோருடன் நேற்று முன்தினம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு வழிபாடு செய்வதற்காக இரவு 11 மணி அளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்றார். சுரேந்தர் மற்றும் குடும்பத்தினர் வழிபாட்டை முடித்துக்கொண்டு நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேந்தர் மற்றும் அவரது மனைவி ஜெனிபர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 31 பவுன் நகைகள் திருட்டுபோய் இருப்பது தெரிந்தது.

    சுரேந்தர் கிறிஸ்தவ ஆலயத்திற்கு புறப்பட்டு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சுரேந்தர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் தடவியல் நிபுணர்கள், துப்பறியும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள் கொள்ளையர்களின் கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை பதிவு செய்தனர்.

    மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    பெரம்பலூரில் கடந்த சில மாதங்களாக கொள்ளை சம்பவங்களும், திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வரு கிறது. பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் நெருக்கடியான குடியிருப்பு பகுதியில் நகைகள் கொள்ளைப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    சிங்கம்புணரி பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி வளந்து வரும் நகரங்களில் ஒன்றாக மாறி வருகிறது. மேலும் தற்போது தனித்தாலுகா அந்தஸ்து பெற்றுள்ளது. இந்தநிலையில் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ள பகுதியான நியூ காலனி பகுதியில் உள்ள விநாயகர் கோவில் உண்டியல் மற்றும் முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் வீடு, முன்னாள் வங்கி ஊழியர் வீடு என அடுத்தடுத்தது தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.

    இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் தங்களின் வீடுகளிலும் கொள்ளையர்கள் புகுந்து விடுவார்களோ என்று அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் மற்றும் வீடுகள் நெருக்கம் கொண்ட எங்கள் நியூ காலனி பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.

    இதனால் எங்கள் பகுதி பொதுமக்கள் உடமைகளையும், தங்களையும் பாதுகாக்க போலீசார் தினமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

    குறிப்பாக கீழக்காட்டு சாலை, நியூ காலனி மற்றும் கூத்தாடி அம்மன் கோவில் சாலை போன்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட வேண்டும் என்றார். இதையடுத்து இந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். #tamilnews
    ×