search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "long"

    • ஊத்துமலை அடிவாரம் திடீர்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டு அருகே நேற்று நள்ளிரவு சுமார் 10 அடி நீள உடனே மலைப்பாம்பு புகுந்தது.
    • மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். பின்பு அந்த பாம்பு ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் விடப்பட்டது.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை அடிவாரம் திடீர்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டு அருகே நேற்று நள்ளிரவு சுமார் 10 அடி நீள உடனே மலைப்பாம்பு புகுந்தது. உ இதுபற்றி ராஜேந்தி ரன் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீய ணைப்பு மற்றும் மீட்பு பணி கள் உதவி மாவட்ட அலுவ லர் சிவக்குமார் தலைமை யில் வீரர்கள் பிரதாப், திருப்பதி, திலீப்குமார், கலை யரசன், ஜெய்ரஞ்சித்குமார், உதயகுமார் ஆகியோர் விரைந்து சென்று மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். பின்பு அந்த பாம்பு ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் விடப்பட்டது.

    • கவுந்தப்பாடி அருகே வீட்டில் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு பிடிப்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் எடுத்து சென்றனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வி (40). இவர் மகள் மகாஸ்ரீ, மருமகன் விக்னேஷ் ஆகியோருடன் அதே பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை விக்னேஷ், செல்வி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டானர். மகா ஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்பொழுது கட்டிலுக்கு அடியில் சத்தம் கேட்டுள்ளது. அப்போது மகா ஸ்ரீ கட்டிலுக்கு கீழ் பார்க்கும்போது நீளமான பாம்பு இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து மகாஸ்ரீ அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கோபி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலை அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமலைசாமி, கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    பின்னர் வீட்டின் கதவை திறந்து பார்க்கும்போது கட்டிலின் அடியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் எடுத்து சென்றனர்.

    ×