search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LEMON FRUIT"

    • திருவிழாவின் முதல் 9 நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடந்தது.
    • நாட்டாமை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள சின்ன மயிலம் என்று அழைக்கப்படும் இரட்டைமலை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதி உலாவும், 21-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. 23-ந் தேதி தேரோட்டமும், 24-ந்தேதி காவடி பூஜையும் நடந்தது. 25-ந் தேதி நள்ளிரவு 12மணி அளவில் நடந்த இடும்பன் பூஜையில் திருவிழாவின் முதல் 9 நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடந்தது.

    நாட்டாமை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார். முதல் நாள் பழம் 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் 2-ம் நாள் பழம் 26 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் , 3-ம் நாள் பழம் 42 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், 4-ம் நாள் பழம் 19 ஆயிரம் ரூபாய்க்கும், 5-ம் நாள் பழம் 11ஆயிரம் ரூபாய்க்கும், 6-ம்நாள் பழம் 34 ரூபாய்க்கும், 7-ம் நாள் பழம் 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 8-ம் நாள் பழம் 13 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 9-ம் நாள் பழம் 15ஆயிரம் ரூபாய்க்கும் என 9 நாள் பழங்களும் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது.

    இந்த பூஜையில் பெங்களூரு, புதுச்சேரி, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குழந்தை இல்லாத தம்பதியினர் ஈரத் துணியுடன் போட்டி போட்டு எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்து சென்றனர். அனைவருக்கும் கருவாட்டு குழம்பு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது . இந்தக் கோவிலில் ஏற்கனவே ஏலத்தில் பழம் வாங்கி சாப்பிட்டு குழந்தை பெற்றவர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து எடைக்கு எடை காணிக்கை செலுத்தினர். கடந்த ஆண்டு முதல் பழம் 31ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 9 பழங்களும் சேர்த்து 80 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் ஏலம் போயிருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 1 லட்சத்து 55 ஆயிரத்து 800 ரூபாய்க்கு கூடுதலாக ஏலம் போனது . எலுமிச்சம் பழம் ஏலம் எடுக்க விரும்புவர்கள் உள்ளூர் நபர்களை வைத்தே ஏலம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது. 

    • எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி புதுக்கோட்டையில் கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • நாளுக்குநாள் சரிவடைவதால் விவசாயிகள் வேதனை

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் ஆழ்குழாய் கிணறு பாசனம் மூலமாக, எலுமிச்சை மரங்க ளை நட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.

    இப்பகுதிகளில் உற்பத்தியாகும் எலுமிச்சை பழங்கள் திருச்சி, மது ரை, தஞ்சை, கோவை, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் சவுதி கத்தார், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்ப டுகிறது.

    இப்பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்களை வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகள் மற்றும் எலுமிச்சை பழக்கடைகள் மூலம் நாள்தோறும் டன் கணக்கில், விவ சாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். எலுமிச்சை பழங்க ள் தற்போது கிலோ ரூ.15-க்கு மட்டுமே வாங்கப்பட்டு வருவதால் எலு மிச்சை பயிரிட்டுள்ள விவசா யிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.

    மேலும் நாளுக்கு நாள் இதன் விலை வீழ்ச்சி கண்டு வருவதால் வி வசாயிகள் அதிருப்தி அடைந்த நிலையில் இருந்து வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது எலுமிச்சை உற்பத்தி ஓரளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், எலுமிச்சை விலை வீழ்ச்சியால் கவலைப்பட்டு வருவதாகவும், இந்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டுமே உற்பத்தி குறைந்து இருந்த சமயத்தில் மட்டும் எலுமிச்சை பழங்கள் கிலோ ரூ.70, ரூ.80 க்கு வாங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் படிப்படியாக உற்பத்தி அதிகரித்த நிலையில், கடந்த வாரம் கிலோ ரூ.20 வரை விற்பனை ஆகி வந்த எலுமிச்சை பழங்கள் தற்போது, கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சியை தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்னார்கள்.

    எலுமிச்சை பழ மொத்த வியாபாரிகளுக்கு எலுமிச்சை காய் ரூ.100-க்கும், பழம் கிலோ ரூ.160-க்கும் விற்பனை செய்கிறோம்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, அர்ச்சுனாபுரம், கான்சாபுரம், அத்தி கோவில், வ.மீனாட்சிபுரம், தாணிப்பாறை, சுந்தரபாண்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு இந்த பகுதியில் எலுமிச்சை பழம் விளைச்சல் நன்றாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். எலுமிச்சை காய் கிலோ ரூ.100-க்கும், எலுமிச்சைபழம் கிலோ ரூ.160-க்கும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்துள்ளோம். 2 ஆண்டுகளாக பெய்த தொடர் மழையால் இந்த பகுதியில் உள்ள கண்மாய்களிலும், கிணறுகளிலும் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது. தண்ணீர் நன்றாக இருப்பதால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்துள்ளது.

    தற்போது எலுமிச்சை பழ மொத்த வியாபாரிகளுக்கு எலுமிச்சை காய் ரூ.100-க்கும், பழம் கிலோ ரூ.160-க்கும் விற்பனை செய்கிறோம்.

    கடந்த ஆண்டு விளைச்சல் இருந்தும் எலுமிச்சை பழம் கிலோ ரூ.60 முதல் ரூ. 80 வரைக்கும் மட்டுமே வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதனால் சென்ற வருடம் பாதிப்பு அடைந்தோம். இந்த ஆண்டு எலுமிச்சை பழம் விளைச்சல் அமோகமாக உள்ளது. கோவில் திருவிழாக்கள் நடை பெறுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் எலுமிச்சை பழத்தின் விலையும் உயர்ந்துள்ளது. எலுமிச்சை பழத்தை நல்ல விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து செல்கின்றனர்.

    கடைகளில் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்கின்றனர். ஒரு எலுமிச்சை பழம் ரூ.15 வரை சில்லரைக்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். விளைச்சல் அமோகமாக இருப்பதாலும், விலையும் உயர்ந்து இருப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×