search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி புதுக்கோட்டையில் கிலோ ரூ.15க்கு விற்பனை
    X

    எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி புதுக்கோட்டையில் கிலோ ரூ.15க்கு விற்பனை

    • எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி புதுக்கோட்டையில் கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • நாளுக்குநாள் சரிவடைவதால் விவசாயிகள் வேதனை

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் ஆழ்குழாய் கிணறு பாசனம் மூலமாக, எலுமிச்சை மரங்க ளை நட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.

    இப்பகுதிகளில் உற்பத்தியாகும் எலுமிச்சை பழங்கள் திருச்சி, மது ரை, தஞ்சை, கோவை, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் சவுதி கத்தார், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்ப டுகிறது.

    இப்பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்களை வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகள் மற்றும் எலுமிச்சை பழக்கடைகள் மூலம் நாள்தோறும் டன் கணக்கில், விவ சாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். எலுமிச்சை பழங்க ள் தற்போது கிலோ ரூ.15-க்கு மட்டுமே வாங்கப்பட்டு வருவதால் எலு மிச்சை பயிரிட்டுள்ள விவசா யிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.

    மேலும் நாளுக்கு நாள் இதன் விலை வீழ்ச்சி கண்டு வருவதால் வி வசாயிகள் அதிருப்தி அடைந்த நிலையில் இருந்து வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது எலுமிச்சை உற்பத்தி ஓரளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், எலுமிச்சை விலை வீழ்ச்சியால் கவலைப்பட்டு வருவதாகவும், இந்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டுமே உற்பத்தி குறைந்து இருந்த சமயத்தில் மட்டும் எலுமிச்சை பழங்கள் கிலோ ரூ.70, ரூ.80 க்கு வாங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் படிப்படியாக உற்பத்தி அதிகரித்த நிலையில், கடந்த வாரம் கிலோ ரூ.20 வரை விற்பனை ஆகி வந்த எலுமிச்சை பழங்கள் தற்போது, கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சியை தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்னார்கள்.

    Next Story
    ×