search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killed by electrocution"

    • சிவகுமார் காரைக்காலில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார்.
    • சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்து போனார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது57). இவர், காரைக்காலில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார்.இவர் சம்பவத்தன்று மின்சாரம் தாக்கி காயம் அடைந்தார். உடனே காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்து போனார். இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மணிகண்டன் கடுவனூர் மின் அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக பணியாற்றி வந்தார்.
    • அறுந்து தொங்கிய ஒயரை எதிர்பாராமல் அவர் தொட்டு விட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூரை சே ர்ந்தவர் பள்ளிப்பட்டான். இவரது மகன் மணிகண்டன் (வயது 21). கடுவனூர் மின் அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக பணியா ற்றி வந்தார். இவர் அதே ஊரில் உள்ள விவசாயிக்கு சொந்தமான வயலில் பழுதான மின் மோட்டா ரை பழுது நீக்கும் பணியில் ஈடுப ட்டிருந்தார். அப்போது மின்கம்ப த்தில் இருந்து அறுந்து தொங்கிய ஒயரை எதிர்பாராமல் அவர் தொட்டு விட்டதாக கூறப்படு கிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வடபொ ன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • புது வீட்டின் மேல் ஏறி வீட்டின் சுவற்றில் தண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தார்.
    • சவுமியா நாராயணன் தலைக்கு மேல் தாழ்வாக சென்ற மின் கம்பி இவரின் மேல் எதிர்பாராத விதமாகபட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே உடையானந்தல் பகுதியைச் சேர்ந்தவர்சவுமியா நாராயணன் (வயது 30). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் அதே பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வந்தார்.

    இன்று காலை வீடு பாதி அளவு முடிந்த நிலையில் வீட்டின் சுவற்றிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. இதனால்சவுமியா நாராயணன் வீட்டின் மேல் ஏறி வீட்டின் சுவற்றில் தண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரின் தலைக்கு மேல் தாழ்வாக சென்ற மின் கம்பி இவரின் மேல் எதிர்பாராத விதமாகபட்டது. உடனே சவுமியா நாராயணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பலியானார்.

    இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவுமியா நாராயணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×