என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kejirwal"

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கெஜ்ரிவாலை கைது செய்தனர்.
    • 28-ந்தேதி (நாளை) வரை அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21-ந்தேதி கைது செய்தது. அவரை 28-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையே கைதை எதிர்த்தும், அமலாக்கத்துறை காவலில் வைத்துள்ளது சட்டவிரோதம் என்றும், உடனடியாக விடுதலை செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆம் ஆத்மி கட்சி மனு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கு இன்று காலை நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அமலாக்கத்துறையின் காவல் நாளையுடன் முடியும் நிலையில் இன்றே உத்தரவு பிறப்பிக்க முதல்-மந்திரி கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கை விடுத்தது.

    அமலாக்கத்துறை தரப்பு கூறும்போது, கெஜ்ரிவாலின் மனுவின் நகல் நேற்றுதான் கிடைத்தது. எனவே விரிவான பதில் அளிக்க 3 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.

    இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிராக இடைக்கால நிவாரணம் வழங்க வழக்கை முன் கூட்டியே விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    • அமலாக்கத்துறையை தொடர்ந்து சிபிஐ அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது.
    • அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அம்மாநில முதல்வரான கெஜ்ரிவாலை கைது செய்தது. அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும்போது அவரிடம் விசாரணை நடத்தி சிபிஐ கைது செய்தது.

    சிபிஐ தன்னை கைது செய்தது செல்லாது என அறிவிக்கக்கோரி கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், ஜாமின் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் எனத் தெரிவித்துள்ளது.

    அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியுள்ளது. சிபிஐ பதிவு செய்த வழக்கில் ஜாமின் கிடைக்காமல் ஜெயலில் உள்ளார்.

    ×