search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kasi vishwanathar temple"

    • அம்பிகையின் திருநாமம் விசாலாட்சி ஆகும்.
    • நவ கன்னியர்கள் இங்கு காட்சி தருகிறார்கள்.

    மகாமகக் குளத்தின் வடக்கு கரையில் அமைந்துள்ளது.

    ராவணனைக் கொல்ல உருத்திராம்சம் பெற வேண்டி ராமர் இங்கு வந்து தவம் புரிந்து சிவ பெருமானை வேண்டினார்.

    சிவ பெருமானும் ராமருக்கு உத்திராட்ச ஆரோகணம் கொடுத்தார்.

    நவநதிகளின் கன்னியர்களை சிவ பெருமான் தன்னோடு இங்கு அழைத்து வந்து இந்தக் கோவிலில்தான் தங்க வைத்தார்.

    மறுநாள் மகாமக குளத்தில் நீராட வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தார்.

    காசியிலிருந்து வந்ததால் காசி விஸ்வநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

    இந்தக் கோவில் மேற்கு திசை நோக்கி இருக்கிறது.

    இறைவனும் மேற்குத் திசையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

    இங்குள்ள அம்பிகை தெற்கு திசையில் இருக்கிறார்.

    அம்பிகையின் திருநாமம் விசாலாட்சி ஆகும்.

    நவ கன்னியர்கள் இங்கு காட்சி தருகிறார்கள்.

    முதலில் கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, நடுவில் காவிரி அடுத்து கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, சரயு என்று வரிசையாக இருக்கிறார்கள்.

    இதில் கங்கை மட்டும் சங்கு, சக்கரம் அபய வரதத்துடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றார்.

    • கடந்த 40 ஆண்டுகளாக திரு நாட்கதிர் எடுத்து வரும் விழா நடைபெறாமல் இருந்து வந்துள்ளது.
    • திரு நாட்கதிர் ஊர்வலமாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள காசி விசுவநாதர் சமேத உலகம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நன்ன கரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான நெல் வயலில் இருந்து தென்காசி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பில் திரு நாட்கதிர் எடுத்து வரும் விழா நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக திரு நாட்கதிர் எடுத்து வரும் விழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பொதிகை குடும்பர் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை படி எடுக்கும் வேளையில் ஈடுபட்டு வந்தார்.அப் போது திரு நாட்கதிர் எடுக்கும் திருவிழா பற்றி கல்வெட்டில் உள்ள தகவல் படி தென்காசி கே.பி. மருத்துவமனை டாக்டர் சங்கர குமார் கோவில் நிர்வாக அதிகாரி முருகனை தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டபோது கல்வெட்டில் உள்ள தகவல் உண்மைதான் இந்த விழா கடந்த 40 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்தது.

    தற்போது தாங்கள் ஏற்பாடு செய்தால் மீண்டும் அந்த பாரம்பரிய வழக்கப்படி தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பில் நன்னகரத்தில் இருந்து காசி விசுவநாதர் கோவிலுக்கு திருநாட்கதிர் எடுத்து வரும் விழாவை சிறப்பாக செய்யலாம் என தெரிவித்தார்.

    அதன் பின்னர் டாக்டர் கே.பி.சங்கர குமார் திருநாட்கதிர் எடுக்கும் விழா ஏற்பாடுகளை குறுகிய காலத்தில் செய்தார். இதனை அடுத்து நேற்று காலை நன்னகரத்தில் உள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு சொந்தமான நெல் வயலில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டு மேளதாளம் முழங்க நெற்கதிர்கள் அறுவடை செய்து நன்ன கரத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை செய்து அங்கிருந்து மேளதாளம் முழங்க குற்றாலம் தென்காசி மெயின் ரோட்டில் உள்ள திருநாட்கதிர் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடத்தினர்.

    பின்னர் ஊர்வலமாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து காசி விசுவநாதர் கோவில் நிர்வாக அதிகாரி முருகன் முன்னிலையில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்ற பின்னர் நெற்கதிர்கள் திருநாட்கதிர் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்த பூஜையில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் கலையரசன், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பொதிகை குடும்பர், சென்னை பேங்க் சந்திரன், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, தி.மு.க. தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சரவணன், கிழாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • காலையில் உலகம்மன் திருத்தேரில் வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கியது.

    தென்காசி:

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் தொடர் நிகழ்ச்சியாக இன்று காலையில் உலகம்மன் திருத்தேரில் வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கியது.

    இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாதுகாப்பு பணியில் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    ×