என் மலர்
நீங்கள் தேடியது "Kapha Nasa Mudra"
- சுக்கு செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது.
- மிளகு உடலில் கபத்தை சமநிலைப்படுத்துகிறது.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் எது அதிகமானாலும், குறைந்தாலும் நோய் உண்டாகும். இவை முத்தாதுக்கள் அல்லது திரிதோடங்கள் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

நோய்க்கு தரப்படுகின்ற சித்த மருந்துகள் வாத, பித்த, கப நிலையை சமன் செய்து உடம்பை இயல்பு நிலைக்கு திரும்பக் கொண்டு வருகிறது. முத்தோடங்கள் இயல்பு நிலையை அடைந்ததும், நோய் குணமடைகிறது.
இந்த திரிதோடத்தை சமன் செய்ய ஏலம், மஞ்சள், சீரகம், மிளகு, சுக்கு, பெருங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவை உதவுகின்றன. இவை அனைத்தும் நமது சமையலறை அஞ்சறைப் பெட்டியிலும் தவறாமல் இருக்கும். இவற்றை அன்றாடம் முறையாக பயன்படுத்தும் போது முத்தோடங்களும் உடம்பில் சமச்சீராக இருக்கும்.

சுக்கு
இது கார்ப்பு சுவை உடையது. செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. அஜீரணத்தை நீக்கும். உடலில் 'வாதம்' சமநிலைப்படுத்த உதவுகிறது. கிழங்கு சார்ந்த உணவுகள் சமைக்கும் போது இதை சேர்க்கவும். இஞ்சியாகவும் இதை பயன்படுத்தலாம்.

மஞ்சள்
இது கசப்பு, கார்ப்பு சுவைகளை உடையது. சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்ட இது, உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்துகிறது. இதை இனிப்பு பண்டங்களைத் தவிர மற்ற எல்லா உணவிலும் சேர்க்கலாம்.

மிளகு
காரத்தன்மை உள்ள இதன் நஞ்சு எதிர்ப்பு ஆற்றல் அலாதியானது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது, உடலில் கபத்தை சமநிலைப்படுத்துகிறது. மிளகாய்க்கு மாற்றாக இதைப் பயன்படுத்துவது நல்லது.

பூண்டு
வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இது வாதம், பித்தம், கபம் மூன்றையும்சமநிலைப்படுத்த உதவுகிறது. பருப்பு மற்றும் கிழங்கு சார்ந்த உணவுகள் சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.

சீரகம்
சிறிது கார்ப்பு சுவையுடைய இது, உடலின் உள் உறுப்புகளை சீர்படுத்துகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. உடலில் பித்தத்தை சமநிலைப்படுத்துகிறது. வயிற்று உப்புசத்தை குறைக்க சிறந்தது. காரமான உணவு வகைகள் சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.

ஏலக்காய்
சிறிது கார்ப்பு, இனிப்பு சுவையுடையது. இது செரிமானத்திற்கு உதவும், உடல் வெப்பத்தை தணிக்கும், வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. இனிப்புகள் மற்றும் இறைச்சி சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.

பெருங்காயம்
கார்ப்பு, கசப்பு சுவைகளை உடையது. செரிமானத்திற்கு உதவும் இது, வாயு, வயிற்றுப் பொருமல், வயிறு எரிச்சல் ஆகியவற்றை நீக்கும். கிழங்கு, பருப்பு வகைகள் சமைக்கும் போது இதை பயன்படுத்த வேண்டும்.

வெந்தயம்
இரும்பு போன்று உடலை உறுதியாக்கும் இது, கசப்பு சுவையுடையது. உடலில் பித்தத்தை நீக்கும். வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது. காரமான உணவுகளை சமைக்கும் போது இதை சேர்க்கவும்.
- யோகா செய்பவர்களுக்கு மனவலிமை அதிகரிக்கும்.
- யோகாவில் ஒரு அம்சம் தான் முத்திரைகள்.
யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும். யோகாவில் ஒரு அம்சம் தான் முத்திரைகள். கை விரல்களால் செய்வது முத்திரைகள்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது இந்த பிரபஞ்சம். இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்த பஞ்ச பூதங்களால் ஆனவையே. மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு, இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

கப நாச முத்திரை:
முதலில் சுண்டு விரலை மடக்கவும். மோதிர விரலை சுண்டுவிரலின் பாதி அளவிற்கு மடக்கவும். கட்டைவிரலை மோதிர விரலின் முதல் முட்டியிலும், சுண்டுவிரலின் இரண்டாவது முட்டியிலும் படும்படி அழுத்திப் பிடிக்கவும். இவ்வாறு 30 வினாடிகளிலிருந்து 15 நிமிடம் வரை பயிற்சி செய்தால் மேலே குறிப்பிட்ட நோய்கள் நீங்கும்.
பயன்கள்
ஆயுர்வேதத்தின் படி பித்த நாடி குறைந்து, கப நாடி கூடினால், சுறுசுறுப்பின்மை, உடல் அதீத குளிர்ச்சி அடைதல், தன்னம்பிக்கை இழத்தல், ஜீரணக் கோளாறு, நீண்ட நேரம் செரிமாணம் ஆகாமல் இருத்தல், தாகமின்மை, மாதவிடாய் கோளாறு, தைராய்டு சுரப்பியின் குறைவான செயல்பாடு (ஹைபோ தைராடிசம்),அதிகச் சளித் தொந்தரவு, ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல், கண்நோய்கள், உதாரணமாக கண்களில் அதிக நீர் சுரத்தல், பூளை கட்டுதல் போன்றவை, ரத்த ஓட்டம் சீராகஇல்லாமை, அதிக எடை, போன்ற நோய்குறிகள் ஏற்படும். இதை போக்குவது இந்த கப நாச முத்திரை.

முகுள முத்திரை:
நான்கு விரல் நுனிகளையும் பெருவிரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.
பயன்கள்
நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையை பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையும்.

கணேச முத்திரை:
வலது உள்ளங்கை மார்பு பகுதியை பார்த்தவாறு இருக்க வேண்டும். இடது கை விரல்களால் இறுகப்பற்றி சங்கிலிபோல் இணைக்க வேண்டும். 6 முறை சீரான சுவாசம் விட்டு செய்தபின் இடது உள்ளங்கை மார்பை பார்த்தபடி வைத்து செய்ய வேண்டும்.
பயன்கள்
ரத்தம் சுத்தமாகி ரத்த ஓட்டம் சீராகும். இதயம், நுரையீரல் நன்கு செயல்படும். நரம்பு மண்டலம் நன்கு செயல்படும்.

ஆகாஷ் முத்திரை:
நமது பெருவிரல் நுனியும் நடு விரல் நுனியும் தொடும்படியும், மற்ற விரல்கள் நேராக நீட்டியும் வைத்துக்கொள்ள வேண்டும்.
பயன்கள்
சைனஸ் தொந்தரவு, தலைவலி, காது வலிகளை குணப்படுத்தும். நெஞ்சு படபடப்பை குறைக்கும். கல்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும். இந்த முத்திரையை தினமும் 45 நிமிடங்கள் அல்லது குறைந்தது 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத்தரும். காலை 2 மணிமுதல் 6 மணிக்குள் எந்த நேரத்தில் செய்தாலும் அதிக பலன் தரும். இந்த முத்திரையை அமர்ந்திருந்து மட்டுமே செய்தல் வேண்டும்.