search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamalhassan"

    • தமிழகம் முழுவதும் நேற்று காலை 9 மணியளவில் இந்தியன் 2 படம் வெளியானது.
    • ரசிகர்கள் மத்தியில் ஒரு கவலையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

    நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் முதல் பாகம் இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியன் 2 பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது.

    அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

    இப்படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியன் 2 படத்தை வெளியிட தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்தது.

    இதையடுத்து, தமிழகம் முழுவதும் நேற்று காலை 9 மணியளவில் இந்தியன் 2 படம் வெளியானது. உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் நேற்று இந்தியன் 2 வெளியானது. படம் வெளியான திரையங்குகள் முன்பு கூடிய ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.

    இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் ஒரு கவலையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, இப்படம், இந்தியா முழுவதும் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. தமிழில் ரூ.17 கோடியும், தெலுங்கில் ரூ.7.9 கோடியும், இந்தியில் 1.1 கோடியும் வசூலித்துள்ளது.

    முன்னதாக, கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' ரூ.32 கோடியும், சமீபத்தில் வெளியான 'கல்கி 2898 ஏடி' ரூ. 95 கோடியும் முதல் நாளில் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
    • நமக்கு எதற்கு பிரச்சனை, நமக்கு எதற்கு வம்பு என்று கடந்து செல்பவர்களால்தான் நாட்டுக்கே பிரச்சனை.

    சென்னை ராயப்பேட்டையில், நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போத அவர் பேசியதாவது:-

    பொதுவாக நாம் திரைக் கலையை ஒரு பொழுதுபோக்காக தான் நினைக்கிறோம். சினிமா பொழுதை போக்குவதற்கு அல்ல. நல்ல பொழுதாக ஆக்குவதற்கு போன்ற நல்ல படைப்புகளும் இருக்கிறது.

    திரைக்கலை என்பது அறிவியலின் ஒரு அழகான குழந்தை. ஒவ்வொரு தேசினத்தின் அழகான கலை முகம். குறிப்பாக இந்தியன் 2 திரைப்படம் ஒரு திரைக்கதை அமைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூற முடியாது.

    அன்றாட நிகழ்வுகளில் நாம் சந்திக்கின்ற, எதிர்கொள்கிற அவலங்கள் இந்த படத்தில் மிக ஆழமாக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நமக்கு எதற்கு பிரச்சனை, நமக்கு எதற்கு வம்பு என்று கடந்து செல்பவர்களால்தான் நாட்டுக்கே பிரச்சனை.

    திரைப்படத்தில் ஒவ்வொரு உரையாடலும் ஒவ்வொரு தத்துவம் போல உள்ளது.

    கமல்ஹாசன் உடல்தோற்றங்களை மாற்றி நடித்திருக்கிற விதம், அனைத்து கதாப்பாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கின்றனர்.

    நீ உன் வீட்டை சரி செய்.. நாடு சரியாகும் என்பேதே இந்தியன் 2 சொல்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • . 28 வருடங்களுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன்
    • அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.

    நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். 28 வருடங்களுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

    அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது. வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.அதை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் படக்குழுவினர் மலேஷியாவில் ப்ரோமோஷன் விழாவில் கலந்துக் கொண்டனர்.

    அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி மிகவும் வைரலாகியது. படத்தில் கமல்ஹாசன் 7 கெட்டப்பில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.ஜே சூர்யா இரண்டாம் பாகத்தில் சில காட்சியில் வரப்போவதாகவும்  மூன்றாம் பகுதியில் நிறைய காட்சிகளில் வருவேன் என்று ப்ரோமோஷன் விழாவில் கூறினார்.

    படத்தின் பாடலான கால்ண்டர் பாடலின் வீடியோ நாளை வெளியாகும் என படக்குழிவினர் அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2.
    • படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகவுள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். 28 வருடங்களுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

    அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது. வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.

    அதை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதற்காக படக்குழுவினர் மும்பை ட்ரைலர் லான்ச் ஈவண்டில் கலந்துக் கொள்வதற்காக சென்றனர்.

    படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகவுள்ளது. டிரைலர் காட்சிகளில் கமல்ஹாசன் மாறுபட்ட இந்தியன் தாத்தாவாக காட்சியளிக்கிறார்.  மிகவும் அதிரடி ஆக்ஷன் நிறந்த சண்டை காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. கமல்ஹாசன் இப்படத்தில் வித்தியாசமான பல  கெட்டப்புகளில்  வருகிறார். `நீங்க காந்தி வழியில் போராடுங்க நான் நேதாஜி வழியில் போராடுகிறேன்` என்ற வசனங்கள் கூஸ்பம்ஸ் நிகழ்வாக தியேட்டரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியன் முதல் பாகம் எப்படி மாபெரும் வெற்றி பெற்றதோ இப்பாகமும் அதேப் போல வெற்றியடையும் என ரசிகர்களால் நம்பப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2.
    • படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.

    நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது. வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.

    அதை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்பாக இன்று காலை சென்னை நிகழ்வில் இந்தியன் 2 படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தியன் முதல் பாகம் எப்படி மாபெரும் வெற்றி பெற்றதோ இப்பாகமும் அதேப் போல வெற்றியடையும் என ரசிகர்களால் நம்பப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு இவர்கள் எல்லாம் இந்த வெற்றி விழாவில் பங்கேற்றிருக்க வேண்டியவர்கள்.
    • "இந்தியன் 2" படத்தை 6 வருடம் எடுத்ததற்கு நாங்களோ, தொழில்நுட்பமோ, தொழில்நுட்ப கலைஞர்களோ, நட்சத்திரங்களோ காரணமல்ல.

    நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.

    இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில், இந்தியன் 2 படக்குழு கலந்து கொண்டது. அதில் பேசிய உலக நாயகன் கமல்ஹாசன்,

    "இந்தியன் 2" 2-ம் பாகத்தில் நடிப்பது பெருமை. 2-ம் பாகம் எடுப்பதற்கான கருவை இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி.

    ஊழல் அதிகமானதுதான் இந்தியன் தாத்தா வருவதற்கு பெரிய அர்த்தமே இருக்கிறது.

    விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு இவர்கள் எல்லாம் இந்த வெற்றி விழாவில் பங்கேற்றிருக்க வேண்டியவர்கள். காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன் 1, இந்தியன் 2 ஒரு உதாரணம்.

    நாங்கள் திரும்பி பார்ப்பதற்குள் சங்கர் என்ற இளைஞர் இளைஞராகவே இருக்கிறார். நான் தாத்தாவாகி போனதால் வித்தியாசம் தெரியவில்லை.

    இந்த மாதிரி மேடைகளில் வழக்கமாக 2 பேர் சண்டை போட்டுக்கொள்வார்கள். மாற்றுக்கருத்து இருக்கும். சங்கரும், கமலும் இணைந்து இதே போல் படம் எடுத்து இருக்கிறோம் அதுதான் இந்தியன் 3. இந்த மேடையில் இதை பேசக்கூடாது.

    "இந்தியன் 2" படத்தை 6 வருடம் எடுத்ததற்கு நாங்களோ, தொழில்நுட்பமோ, தொழில்நுட்ப கலைஞர்களோ, நட்சத்திரங்களோ காரணமல்ல.

    இயற்கை, கொரோனா வைரஸ், விபத்துக்கள் என பல விஷயங்கள் எங்களுக்கு இடையூறாக வந்தது.

    அதில் இருந்து எல்லாம் எங்களை மீட்டு தோளில் சுமந்துவந்த லைகா நிறுவனத்திற்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் என்றென்றும் இந்தியன் 2, இந்தியன் 3 கடமைப்பட்டது.

    அதன் வெற்றியை அனுபவிக்கும் முதல் ஆட்கள் அவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் சங்கர் அவர்களுக்கும் எனக்கும் ஆசையாக இருக்கிறது. அதையடுத்து ஒரு ரசிகனாக ஏற்றெடுத்த உதயநிதி அவர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர் இந்த படத்தையும், நடிகனையும், டைரக்டரையும் பெரிதாக ரசிக்கிறார் என்பது தான் உண்மை.

    இங்கு இருக்கும் நண்பர்கள் எல்லோரும் இந்த படத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்தது போல் தெரியவில்லை. சந்தோஷமாக நடித்தார்கள். அதுபோல் வாய்ப்பது மிகவும் கடினம்.

    இந்த படம் பல சாதனைகளை படைக்கும் என்று நம்பிக்கொண்டிருப்பதனால் அடுத்த விழாவில் விட்டதை பிடித்துக்கொள்ளலாம்.

    இனி நீங்கள் கொடுக்கப்போகும் பாராட்டு, விமர்சனங்கள் அனைத்துக்கும் நன்றி என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதே சிலிர்ப்பு 25 ஆண்டுகள் கழித்தும் அப்படியே இருக்கு.
    • கமல் நடிப்பை முழுமையாக பார்க்க விடாமல் செய்தது.

    நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.

    இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில், இந்தியன் 2 படக்குழு கலந்து கொண்டது. அதில் பேசிய இயக்குநர் சங்கர், இன்றைய சூழலில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்தியன் 2. இந்தியன் 1 கதை தமிழகத்திற்குள் நடப்பது போன்ற சம்பவங்களை கொண்டிருந்தது. இந்தியன் 2 தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள் பற்றியும் பேசுகிறது. இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கு.

    இந்த படம் உங்கள் ஒவ்வொருத்தரையும் யோசிக்க வைக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் சிறப்பாக வருவதற்கு முதல் காரணம் கமல்ஹாசன் தான். முதல் பாகத்தில் கூட 40 நாட்கள் தான் சிறப்பு வேடம் போட்டு கமல் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு தினமும் சிறப்பு வேடம் போட வேண்டி இருந்தது.

    மேக்கப் காரணமாக படப்பிடிப்பு துவங்கும் முன்பே வந்து, படப்பிடிப்பு முடிந்தும் எல்லோரும் புறப்பட்ட பிறகே கமல்ஹாசன் புறப்பட்டு சென்றார். அவரது மேக்கப்-ஐ போடுவதற்கும், அழிப்பதற்கும் 1 மணி நேரம் ஆகிவிடும். முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல்ஹாசனை முதல்முறை பார்த்த போது ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அதே சிலிர்ப்பு 25 ஆண்டுகள் கழித்தும் அப்படியே இருக்கு.

    முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தாவின் மேக்கப் கமல்ஹாசனின் நடிப்பை முழுமையாக பார்க்க விடாமல் செய்தது. இந்தமுறை மேக்கப் சார்ந்த நுட்பங்கள் வளர்ச்சி அடைந்திருப்பதால், மிகவும் மெல்லிய செயற்கை சருமம் மேக்கப் ஆக போட்டிருக்கிறோம். இதனால், கமல்ஹாசனின் நடிப்பை கடந்த பாகத்தில் இருந்ததை விட இந்த பகாத்தில் அதிகளவில் பாரக்க முடியும்.

    கமல்ஹாசனுக்கு எந்த மாதிரி சவால் கொடுத்தாலும், அவர் அதை சிறப்பாக செய்கிறார். அவர் நடிக்கும் காட்சியை படமாக்கும் போது ஒவ்வொரு காட்சியிலும் பிரமிப்பா இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான இசையை அனிருத் கொடுத்திருக்கிறார். அவருக்கு என்னோட நன்றி. படத்தில் ஒவ்வொரு டியூனும் 100 சதவீதம் ஓ.கே. சொல்லும்வரை திரும்ப திரும்ப செய்து கொடுத்தார். படத்தில் நடிகர் விவேக் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு இங்கு கிடையாது.
    • தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு.

    சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது, மேலவீதி பகுதியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    சாதியம் தான் என் எதிரி. என் வாழ்க்கையில் சாதிக்கு இடமில்லை. என் சினிமாக்களிலும் அப்படிதான். பிறகு, சினிமாவிற்கு ஏன் ஜாதி பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்கலாம். குடியின் கொடுமையைப் பற்றி நான் ஒரு குறும்படம் எடுக்க நேர்ந்தால், அதன் மையப் பாத்திரம் யாராக இருப்பான் ? ஒரு குடிகாரனாகத் தான் இருப்பான். அவன் இல்லாமல் அந்த கருத்தை சொல்ல முடியாது.

    அதுபோல், சாதி வெறியனை மையப்படுத்தி தான், படத்தின் நிறைவு கருத்தை சொல்ல முடியும். அவன் பாழான கதையையும், பண்பட்ட கதையையும் கூறுவதால் அது சாதியை உயர்த்திப்பிடிப்பது ஆகாது. விமர்சிப்பதாகும். இது பதில் அல்ல. விளக்கம்.

    ஆனால், சாதியே இல்லை என்கிறீர்கள். சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறீர்களே என்று கேட்கலாம். இன்னும் எத்தனை பேர் அடிகோட்டு விளிம்பில் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்.

    ஏனென்றால், இங்கு அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு கிடையாது. மாநிறத்தில் இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். கருப்பாக இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். அவனை எல்லாம் விடுவிக்க வேண்டும்.

    தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எப்போதும் இல்லாத அளவில் நம் மீனவர்கள் கைதாவதும், சிறையில் அடைக்கப்படுவதும் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    ஒன்றிய அரசு என்று சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறது. இவர்கள் ஒன்றிய அரசு கிடையாது. மக்களோடு ஒன்றாத அரசு.

    இதனால் தான் திருமாவளவனோடு தோள் உரசி களம் காண்கிறேன்.

    தமிழ்நாட்டின் குரலாக ஸ்டாலின் திகழ்கிறார்.. இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி திகழ்கிறார்.. குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • குழுவில், மவுரியா, அருணாச்சலம், தங்கவேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக, பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு, வேட்பாளர் பட்டியல் என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணிகளை செய்து வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

    இந்த குழுவில், மவுரியா, அருணாச்சலம், தங்கவேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்பு.
    • விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    இந்த நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டர்.

    இந்நிகழ்வில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்றார்.

    மேலும், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நான் கவிஞனும் அல்ல.. கவிதை விமர்சகனும் அல்ல.. கவிஞராகவும், கலை விமர்சகராகவும் இருந்து கோலோச்சிய கலைஞர் மட்டும் இன்று இருந்திருந்தால் 'மகா கவிதை' தீட்டிய 'கவிப்பேரரசு' வைரமுத்துவை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • வரும் 24ம் தேதி அன்று ராகுல் காந்தி பாதயாத்திரையை டெல்லியில் தொடங்க உள்ளார்.
    • பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை நேற்று 100-வது நாளை எட்டியது.

    வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானுக்குள் இந்த யாத்திரை நுழைந்திருக்கிறது.

    நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை நேற்று 100-வது நாளை எட்டியது. இது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது.

    இந்நிலையில், வரும் 24ம் தேதி அன்று ராகுல் காந்தி பாதயாத்திரையை டெல்லியில் தொடங்க உள்ளார். இந்த பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப் படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
    • தமிழர்கள் மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிக்கிறது.

    மியான்மர் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன், சீமான் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தாய்லாந்து நாட்டிற்கு வேலை தேடிச் சென்ற தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மியான்மர் நாட்டுக்கு கடத்திச் சென்று, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப் படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெளிநாடு வேலை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட தமிழர்கள் மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிக்கிறது.

    தற்போது மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய ஒன்றிய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×