search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalpakkam Nuclear Plant"

    • நாளை பிரதமர் மோடி வரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • சென்ற முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு நாளை பிரதமர் மோடி வரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழகம் வருகிறார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தரும் அவர் இந்த முறை சென்னையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இதற்காக மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டு நாளை மதியம் 1.15 மணி அளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்து முதலில் அவர் கல்பாக்கம் சென்றடைகிறார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கல்பாக்கத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    இதன் பிறகு விமான நிலையத்திலிருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலை சென்றடைகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி நாளை இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து தெலுங்கானாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி கல்பாக்கம் வருவதை ஒட்டி, "மாமல்லபுரம், கொக்கிலிமேடு, மெய்யூர், சட்ராஸ், புதுபட்டினம், உய்யாளி குப்பம் போன்ற பத்து கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மாலை 3 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக" மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்ற முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்திய எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம்:

    தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீசார் 40 பேர் உயிரிழந்தனர்.

    இச்சம்பவத்தை அடுத்து இந்திய விமானப்படை தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களை போர் விமானம் மூலம் குண்டு வீசி அழித்தது. நேற்று இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்டியடித்தபோது சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார்.

    இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் வான்வழி, கடல்வழி, தரைவழி பாதுகாப்புகளை நவீன ரேடார் கருவிகள், கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.

    அணுமின் நிலையத்துக்குள் பணிக்கு செல்லும் அனைத்து வடமாநில ஊழியர்களும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    ஒப்பந்த பணிக்கு வருவோர் அனைவரும் அவரவர் குடியிருக்கும் பகுதி காவல் நிலையத்தில் நன்னடத்தை சான்று வாங்கி வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நகரியம் பகுதியில் குடியிருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி முகாம் மற்றும் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு கருதி உள்ளே நுழையும் அனைத்து ஊழியர்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பி வருகிறார்கள்.

    கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள அணுசக்தி மையத்தில் ஆண்டுக்கு ஒருமுறை கதிரியக்க மாசு கட்டுப்பாட்டு திட்டத்தின் படி 3அடுக்கு அவசரநிலை பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள அணுசக்தி மையத்தில் ஆண்டுக்கு ஒருமுறை கதிரியக்க மாசு கட்டுப்பாட்டு திட்டத்தின் படி 3அடுக்கு அவசரநிலை பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

    அதன்படி நேற்று மாலை ஊழியர்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் அவசர நிலை நிர்வாகக்குழுவின் தலைவரும் நிலைய இயக்குனருமான சத்திய நாராயணன் தலைமையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

    அணுமின் நிலையத்தினுள் அணுக்கசிவு ஏற்பட்டு கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளதாக அவசர ஒலி எழுப்பப்பட்டது. இதனால் ஊழியர்கள் பதட்டம் அடைந்தனர். அவர்களை கட்டிடத்தின் உள்ளே இருக்கும் படியும் அனைத்து ஜன்னல்களையும் மூடவும் அறிவுறுத்தப்பட்டது.

    காயமடைந்த ஊழியர்களை ஆம்புலன்சில் ஏற்றுவது போன்றும் அனைவருக்கும் அயோடின் மாத்திரை கெடுப்பது போன்றும் நடித்து காண்பிக்கப்பட்டது.பின்னர் அனைவரையும் அவசர வழிகளில் அனுப்பினர்.

    பதட்டம் அடைந்த ஊழியர்கள் அவசரமாக வெளியேறினர். அவர்கள் வெளியில் வந்த பின்னர் தான் இது ஒத்திகை என்பது தெரிந்தது. பின்னர் கதிரியக்கத்தால் மாசுபட்ட வாகனங்களை ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். இந்த ஒத்திகை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

    ×