search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional security"

    இந்திய எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம்:

    தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீசார் 40 பேர் உயிரிழந்தனர்.

    இச்சம்பவத்தை அடுத்து இந்திய விமானப்படை தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களை போர் விமானம் மூலம் குண்டு வீசி அழித்தது. நேற்று இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்டியடித்தபோது சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார்.

    இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் வான்வழி, கடல்வழி, தரைவழி பாதுகாப்புகளை நவீன ரேடார் கருவிகள், கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.

    அணுமின் நிலையத்துக்குள் பணிக்கு செல்லும் அனைத்து வடமாநில ஊழியர்களும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    ஒப்பந்த பணிக்கு வருவோர் அனைவரும் அவரவர் குடியிருக்கும் பகுதி காவல் நிலையத்தில் நன்னடத்தை சான்று வாங்கி வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நகரியம் பகுதியில் குடியிருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி முகாம் மற்றும் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு கருதி உள்ளே நுழையும் அனைத்து ஊழியர்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பி வருகிறார்கள்.

    ×