search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalaipuli dhanu"

    • படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவரேற்பு கிடைக்கவில்லை.
    • ரீ-ரிலீஸ் பற்றிய பேச்சுக்கள் அவ்வப்போது வெளியாகின.

    கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ஆளவந்தான். ரிலீசான போதே அதநவீன தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஆளவந்தான் படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவரேற்பு கிடைக்கவில்லை. எனினும், இந்த படத்தின் ரீ-ரிலீஸ் பற்றிய பேச்சுக்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன.

    அந்த வரிசையில், ஆளவந்தான் படத்தின் டிஜிட்டல் பதிப்பு உருவாக்கப்பட்டு, ரீ-ரிலீசுக்கு தயாராகி வருவதை தயாரிப்பாளரான எஸ். தானு தெரிவித்து இருந்தார். மேலும் இதற்காக படத்தின் இரண்டு பாடல்களும் வெளியிடப்பட்டு விட்டன.

    இந்த நிலையில், ஆளவந்தான் படம் ரிலீசாகும் அதே தினத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல், ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் தங்களது நட்சத்திரங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் மோதவிருப்பதை ஒட்டி சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    டிசம்பர் 8-ம் தேதி ஆளவந்தான் படம் ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படமும், இதே தினத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி டிசம்பர் 8-ம் தேதி ஆளவந்தான் மற்றும் முத்து படங்கள் ரீ-ரிலீஸ் ஆவது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ரீ-ரிலீஸ் செய்வது பற்றி சூசகமாக தகவல் தெரிவித்து இருந்தார்.
    • உலகம் முழுக்க ஆயிரம் திரையரங்குகளில் வெளியீடு.

    கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ஆளவந்தான். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இந்த படம் உருவான காலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. எனினும், இந்த படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு கிடைக்கவில்லை.

    ஆளவந்தான் படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தயாரிப்பாளர் எஸ். தானு பதில் அளித்திருந்தார். அப்போது, படத்தை ரீ-ரிலீஸ் செய்வது பற்றி சூசகமாக தகவல் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஆளவந்தான் படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    அந்த வரிசையில், ஆளவந்தான் திரைப்படம் அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் தானு தெரிவித்து இருக்கிறார். ஆளவந்தான் திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி உலகம் முழுக்க ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கடவுள் பாதி மிருகம் பாதி கவிதை பாடல் நாளை (நவம்ர் 17) மாலை 5.03 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கமல்ஹாசனுடன் ரவீனா டாண்டன், அனுஹாசன் மற்றும் பலர் நடித்திருக்கும் ஆளவந்தான் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார்.

    • வருமான வரித்துறையினர் சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • தயாரிப்பாளர்கள் அன்புசெழியன், கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்ட பலரின் வீட்டில் சோதனை நடைப்பெற்றது.

    சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோரது அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

     

    இந்நிலையில் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது. 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.26 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • அசுரன், கர்ணன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தவர் கலைப்புலி தாணு.
    • இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

    1985-ஆம் ஆண்டு யார் என்ற படத்தின் முலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கலைப்புலி தாணு. அதன்பின் கிழக்கு சீமையிலே, விஐபி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆளவந்தான், காக்க காக்க, மாயாவி, சச்சின், தெறி, கபாலி, துப்பாக்கி, அசுரன், கர்ணன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படங்களை தயாரித்து வருகிறார்.

    கலைப்புலி தாணு

    கலைப்புலி தாணு

     

    இந்நிலையில் சென்னை, தி.நகர் பிரகாசம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்தில் இன்று காலை முதல் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் சில தயாரிப்பாளர்கள் பெயரும் வருமான வரித்துறை சோதனை பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.

    பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

    ×