search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jharkhand HC"

    முன்ஜாமின் கேட்டு மனு செய்த மூன்று பேரின் டெபாசிட் தொகையை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பணம் செலுத்த வேண்டும் என ஜார்கண்ட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #KeralaCMReliefFund #JharkhandHC
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலத்தில் மோசடி வழக்குகளில் தொடர்புடைய மூன்று நபர்கள் தங்களுக்கு முன்ஜாமின் கோரி ஜார்கண்ட ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். உரிய கட்டணத்துடன் அந்த மனுக்களை ஏற்று பரிசீலித்த நீதிபதி ஏ.பி.சிங் வித்தியாசமான முறையில் நேற்று உத்தரவிட்டார்.

    முன்ஜாமின் பெறுவதற்கான முன்வைப்பு (டெபாசிட்) தொகையான 7 ஆயிரம் ரூபாயை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள முதல் மந்திரியின் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீதை காட்டி முன்ஜாமின் உத்தரவுக்கான கோர்ட்டின் நகலை பெற்று செல்லலாம் என தனது உத்தரவில் நீதிபதி ஏ.பி.சிங் குறிப்பிட்டுள்ளார்.

    வழக்கமாக முன்ஜாமினுக்கு செலுத்தப்படும் தொகையை ஜாமின் காலம் முடிந்த பின்னர் செலுத்திய நபர்கள் பெற்று செல்லலாம். ஆனால்,  முதல் மந்திரியின் நிவாரண நிதிக்கு செலுத்திய பின்னர் அந்த தொகை மாநில அரசுக்கு வந்த நன்கொடை கணக்கில் சேர்ந்துவிடும். எனவே, பணத்தை செலுத்திய நபர் மீண்டும் அந்த தொகையை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaCMReliefFund  #JharkhandHC
    லாலு பிரசாத் யாதவின் ஜாமீனை நீட்டிக்க மறுத்த ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு வரும் 30-ந்தேதி அவர் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. #LaluPrasadYadav #JharkhandHC
    ராஞ்சி:

    பீகார் முன்னாள் முதல்- மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தனது ஆட்சி காலத்தில் பீகாரில் மாட்டுத் தீவனம் வாங்கியதில் பல கோடி ஊழல் செய்துள்ளார்.

    இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு அவருக்கு 5 வழக்குகளில் ஜெயில் தண்டனை விதித்துள்ளது. இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே லாலு பிரசாத் யாதவுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மகன் திருமணத்துக்காக 3 மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் அவர் தனது மகன் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    இந்த ஜாமீனை மருத்துவ காரணங்களுக்காக மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று லாலு சார்பில் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு லாலு பிரசாத்துக்கு ஜாமீன் நீடிப்பு வழங்க முடியாது என்று மறுத்து விட்டதுடன் வருகிற 30-ந்தேதி அவர் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிட்டது. #LaluPrasadYadav #JharkhandHC
    ×