என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery cash robbery"

    வீட்டின் கதவை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகை - பணம் மற்றும் பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    மதுரை:

    மதுரை எல்.ஐ.சி. நகர் எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்தவர் சீதாராமன் (வயது 41). இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். நேற்று அவர்கள் வீடு திரும்பினர். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

    இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டிற்குள் இருந்த 11 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், எல்.இ.டி. டி.வி. மற்றும் ரூ.15 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக சீதாராமன் தெரிவித்தார். கொள்ளைப்போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

    அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

    வில்லியனூர் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியிடம் நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கீழுர் மேலண்டவீதியை சேர்ந்தவர் கோபாலசாமி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது75). கோபால்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் மகன்களுக்கு திருமணமாகி அவர்கள் மனைவி குழந்தைகளுடன் வேறு பகுதியில் வசித்து வருகிறார்கள்.

    பழனியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். அவர் தினமும் தூங்க செல்ல முன்பு கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை ஒரு டப்பாவில் வைத்து விட்டு மணிபர்சை தனது தலையணையில் வைத்து தூங்குவது வழக்கம். அதுபோல் நேற்று இரவும் நகையை டப்பாவில் வைத்துவிட்டு மணிபர்சை தலையணை அடியில் வைத்துவிட்டு தூங்கினார்.

    நள்ளிரவில் திடீரென பழனியம்மாள் விழித்தெழுந்த போது தலையணையில் கீழ் வைத்திருந்த மணிபர்சை காணாமல் திடுக்கிட்டார். மேலும் டப்பாவில் வைத்திருந்த நகையையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் தினமும் நகை மற்றும் மணிபர்சை மறைத்து வைப்பதை நோட்டமிட்டு இதனை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை போன நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ.75 ஆயிரமாகும்.

    இதுகுறித்து பழனியம்மாள் மங்களம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குபதிவு செய்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    ×