search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jeevan Thondaman"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1974-ம் ஆண்டு இந்தியா, இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது
    • கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை

    காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

    இதனையடுத்து இந்திய அரசியலில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பி உள்ளது.

    1974-ம் ஆண்டு இந்தியா, இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

    கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றும் கச்சத்தீவை திரும்ப தர வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவிடம் இருந்து இதுவரை எழவில்லை என்றும் தெரிவித்தார்.

    ஒருவேளை கச்சத்தீவு தொடர்பாக இந்தியா கோரிக்கை விடுத்தால் இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதில் அளிக்கும் என்றும் இலங்கையை பொருத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

    • இலங்கை மலையக மக்களின் வளர்ச்சிக்காக இந்தியா ரூ.750 மில்லியன் வழங்கி உள்ளது.
    • ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்தியா- இலங்கை இடையே தொடர்பு இருந்து வருகிறது.

    சென்னை:

    இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் மந்திரியுமான ஜீவன் தொண்டைமான், இந்தியாவுக்கு ஒரு வார பயணமாக வந்தார். அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு சென்னை வந்தார்.

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். பின்னர் தனது பயணத்தை முடித்து கொண்டு சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இலங்கை மந்திரி ஜீவன் தொண்டைமான், நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை 13-வது சட்டத்திருத்தம் தொடர்பான இலங்கை ஜனாதிபதியின் ஆவணத்தை இந்திய பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளோம். இலங்கை மலையக மக்களின் வளர்ச்சிக்காக இந்தியா ரூ.750 மில்லியன் வழங்கி உள்ளது. இதற்காக இந்திய மக்களுக்கும், மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் நிலை குறித்தும் பேசப்பட்டது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் தமிழக அரசு, இலங்கை மக்களின் வளர்ச்சிக்காக உதவிகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டு உள்ளோம்.

    ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்தியா- இலங்கை இடையே தொடர்பு இருந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில்தான் அரசியலாக மாறி பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. கலாசார, பொருளாதார ரீதியாக தொடர்பு கொண்ட நாடு.

    தமிழகத்தில் இருந்து அடிமைகளாக போனவர்கள்தான் மலையக மக்கள். தமிழகம் எங்களின் தொப்புள் கொடி உறவு. தமிழக அரசு எங்களுக்கு எந்தந்த உதவி செய்ய முடியுமோ அது சம்பந்தமாக முதலமைச்சரிடம் பேசி உள்ளேன்.

    இந்தியா-இலங்கை இடையே உள்ள உறவு பலமானது. வேறு நாடுகளுடன் நெருக்கமான உறவு இருக்காது. இலங்கையில் சில தரப்பினர் இந்தியா பற்றி மக்கள் மத்தியில் தவறாக பரப்பி அரசியல் செய்கிறார்கள். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது உண்மையான நண்பன் யார்? என தெரியவந்தது.

    இந்திய ரூபாயை டாலர், யூரோ போன்று இலங்கையில் பொது பணமாக பயன்படுத்த ஆலோசனை செய்து வருகிறோம். பிரதமரை சந்தித்தபோது இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையான யு.பி.ஐ. பண பரிவர்த்தனைச் முறையை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×