search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jalalabad"

    உள்நாட்டு தலையீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் மூடப்பட்ட பாகிஸ்தான் துணை தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. #Pakistanconsulate
    காபுல்:

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் அண்டைநாடான ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியின் அருகாமையில் உள்ள இடங்களின்மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் ஊக்குவித்து வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கேயுள்ள ஜலாலாபாத் நகரில் இயங்கிவரும் பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் காரில் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை கடத்திச் சென்றதாக செய்திகள் வந்தன.

    மேலும், ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு விசாவுக்காக விண்ணப்பித்தால் அவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் விதிக்கபடும் நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்கர் மாகாண கவர்னர் ஹயாத்துல்லா ஹயாத் கண்டனம் தெரிவித்திருந்தார்.


    இதன் விளைவாக தங்கள் நாட்டின் விவகாரங்களில் அண்டைநாடான ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு மாகாண கவர்னர் தலையீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜலாலாபாத் நகரில் உள்ள துணை தூதகரத்தை மூடுமாறு பாகிஸ்தான் அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி உத்தரவிட்டது.

    இந்நிலையில், ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஜலாலாபாத் துணை தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளான இன்று நூற்றுக்கணக்கானவர்கள் இந்த தூதரகத்தில் விசாவுக்காக விண்ணப்பித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் தெரிவித்துள்ளார். #Pakistanconsulate #Jalalabadconsulate
    ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு பலரை சிறைபிடித்த பயங்கரவாதிகளுக்கும், அதிரடி படைக்கும் நடந்த மோதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Afghanistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் அகதிகள் நலவாழ்வு இயக்குனரகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வெளிநாட்டில் இருந்து நிதி அளிப்பவர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் அலுவலகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இதனை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேற முயற்சிக்கும்போது, அலுவலகத்தினுள் நுழைந்த பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் உட்பட பலரை துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர்.


    இதையடுத்து அவர்களை மீட்க அதிரடி படையினர் முயற்சித்தனர். இந்த முயற்சியில் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.

    மேலும், அலுவலகத்தினுள் பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கி இருக்கின்றன்றனரா என்பது குறித்து வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு நாள் முழுவதும் நீடித்த இந்த மோதல் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. #Afghanistan
    ஆப்கானிஸ்தான் ராணுவ வாகனத்தின் மீது நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். #Afghanistan #SuicideAttack
    ஜலாலாபாத்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரத்தில் வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு வந்த ஒருவர், ராணுவ வாகனம் ஒன்றின்மீது நேற்று மோதினார். இதில் குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் சிக்கி 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் ஆவர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த தற்கொலைப்படை தாக்குதலை நேரில் கண்ட ஒருவர், “குண்டுவெடிப்பை தொடர்ந்து பெரிய தீப்பந்து போல வெளிப்பட்டது. அதைக் கண்டு மக்கள் ஓட்டம் எடுத்தனர்” என்று கூறினார். இந்த தாக்குதலால் அருகில் இருந்த பெட்ரோல் நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.

    ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடக்கும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நேற்று முன்தினம் நம்பிக்கை வெளியிட்டார். ஆனால் மறுநாளான நேற்று இந்த தாக்குதல் நடந்து இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்து உள்ளது.  #Afghanistan #SuicideAttack #tamilnews 
    ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். #Jalalabadsuicideattack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று அடுத்தடுத்து 4 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.

    இந்நகரில் உள்ள சுங்கத்துறை நிதி அலுவலகம் அருகே இன்று பிற்பகல் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி மனித வெடிகுண்டாக வெடித்து சிதறினான். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இன்று நடைபெற்ற மேலும் மூன்று தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. #Jalalabadsuicideattack  
    ×