search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ispl"

    • இரு கைகளும் இல்லாத அமீர் தனது கால் மூலம் பவுலிங் செய்து அசத்தினார்.
    • சச்சின், அமீர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியிலும், அமீர் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியும் அணிந்து விளையாடினர்.

    இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், அணியின் உரிமையாளர்களான சூர்யா, அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ராம் சரண் மற்றும் சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோர் கலந்து கொண்டு முதல் சீசனை தொடங்கி வைத்தனர். தொடக்க விழாவில் சச்சின் டெண்டுல்கர், அக்ஷய் குமார், ராம் சரண் மற்றும் சூர்யா ஆகியோர் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ வைரலானது.

    இந்த நிலையில் தான் இந்த தொடக்க விழாவில் அமீர் ஹூசைன் லோனி மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து வந்த சச்சின் டெண்டுல்கர் அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் பிஜ்பெஹாராவில் உள்ள வகாமா கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் அமீர் ஹூசைன் லோனி. தற்போது 34 வயதாகும் அமீர் ஜம்மு காஷ்மீரின் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார். இவரது அசாத்திய திறமை என்னவென்றால், இரண்டு கையும் இல்லை, ஆனாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரை கிரிக்கெட் விளையாட தூண்டியது. எப்படி என்றால், தனது கழுத்தை பயன்படுத்தி கிரிக்கெட் பேட்டை பிடித்து அதனைக் கொண்டு பேட்டிங் செய்து வருகிறார்.

    இந்த போட்டியில் சச்சின், அமீர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியிலும், அமீர் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியும் அணிந்து விளையாடினர். நேற்று நடந்த சிறப்பு போட்டியில் கில்லாடி 11 மற்றும் மாஸ்டர்ஸ் 11 அணிகள் விளையாடின.

    இதில், சச்சின், அமீர், முனாப் படேல், யூசுப் பதான் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மாஸ்டர் அணிக்காக விளையாடினர். இதே போன்று அக்ஷய் குமார், நடிகர் சூர்யா, பிரவீன் குமார், ராபின் உத்தப்பா, இர்பான் பதான் ஆகியோர் கில்லாடி 11 அணிக்காக விளையாடினர்.

    முதலில் பேட்டிங் செய்த மாஸ்டர்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக சச்சின் - அமீர் களமிறங்கினர். மேலும் இரு கைகளும் இல்லாத அமீர் தனது கால் மூலம் பவுலிங் செய்து அசத்தினார். மேலும் சச்சின் ஓவரில் கீப்பர் பின்னாடி அடிக்கப்பட்ட ஒரு பந்தை வேகமாக துரத்தி பிடித்தார். இந்த செயலை பார்த்த சச்சின் உள்பட பல வீரர்கள் அவரை பாராட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மற்றொரு வீடியோவில் பேட்டிங் செய்த நடிகர் சூர்யாவிற்கு சச்சின் பவுலிங் செய்வது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது.
    • ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.

    சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் டி10 தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தபடுகிறது. இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது. இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது.

    மார்ச் 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கினர்.

    இந்த தொடரின் முதல் போட்டியில் அமிதாப் பச்சன் அணியும் அக்ஷய் குமார் அணியும் மோதுகின்றனர். இதன் தொடக்க விழாவில் சச்சின், ராம் சரண், சூர்யா, அக்ஷய் குமார் ஆகியோர் உலக அளவில் பிரபலமான நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் சூர்யா பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் 'வாடிவாசல்', 'சூர்யா 43' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து 'வாடிவாசல்', 'சூர்யா 43' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும், அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார்.


    இந்நிலையில், நடிகர் சூர்யா கிரிக்கெட்டிலும் தடம் பதிக்கிறார். அதாவது, டி10 தொடர் தற்போது இந்தியாவிலும் நடத்தப்பட இருக்கிறது. ஐ.எஸ்.பி.எல் என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது. இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது.


    2024-ஆம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கினர்.


    இதைத்தொடர்ந்து, ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார். இந்த போட்டியில் பங்கேற்க உள்ளவர்கள் தற்போதே முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    ×