என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "investigated"
- செந்துறை அருகே அமைச்சருடன் ‘டிக் டாக்’ செய்ய முயன்ற 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- செந்துறை பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்க போக்கு–வரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வந்தி–ருந்தார்
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்க போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வந்திருந்தார். பல்வேறு கிராமங்களில் திட்ட பணிகளை தொடங்கி வைத்துவிட்டு சன்னாசிநல்லூரில் இருந்து குழுமூர் நோக்கி அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் வந்து கொண்டு இருந்தனர். அப்போது குழுமூர் காட்டுப்பகுதியில் 2 இளைஞர்கள் செல்போனுடன் அமைச்சர் காரை வழிமறித்த–னர். அதனை தொடர்ந்து அமைச்சர் அவர்களிடம் பேசிவிட்டு குழுமூர் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் குடிபோதையில் இருந்த அந்த இளைஞர்கள் விரைந்து வந்து அங்கு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு கிளம்பி அமைச்சரிடம் வந்து செல்பி எடுப்பது போல் நடித்தனர். மேலும் அமைச்சரிடம் டாஸ்மாக்கில் கூடுதலாக வாங்கும் ஐந்து ரூபாயை குறையுங்கள் என்று ரகசியமாக டிக்டாக் வீடியோ எடுத்தனர். இதனை அறிந்த அமைச்சர் உஷாராகி போலீசாரிடம் அந்த இளைஞர்களை பிடித்து ஒப்படைத்தார். அதனைத் செந்துறை போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட இளைஞர்கள் கல்லங்குறிச்சி அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அமைச்சரிடம் தகராறு செய்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த பாசி விற்கும் பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- முதுகுளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்சாக்குளம் கிராமத்தில் தர்மமுனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் கீழச்சாக்குளம், ஏனாதி, கண்டிலான், பூங்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். அப்போது பெண் பக்தர்கள் சிலர், தாங்கள் அணிந்திருந்த நகைகளை காணோம் என கூச்சல் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழச்சாக்குளம் போஸ் மனைவி குருவம்மாளின் 11 பவுன் நகையும், ஏனாதி முத்து மனைவி பாரதியின் 1¼ பவுன் நகை, கீழச்சாக்குளம் பூச்சி மனைவி பாண்டியம்மாளின் 2 பவுன் நகை, பரமக்குடி கருப்பையா மனைவி காளிமுத்துவின் 3½ பவுன் நகை என மொத்தம் 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் முதுகுளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்்த சம்பவம் தொடர்பாக பாசி விற்பனை செய்யும் 10 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்