search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interviewed"

    • எல்கார்ட் அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார்.
    • நிச்சயமாக எங்கள் மீது எந்த தவறும் இல்லை என நிருபித்து செந்தில் பாலாஜி வழக்கில் இருந்து வெளியே வருவார்.

    கோவை,

    கோவை பீளமேட்டில் உள்ள தொழில் நுட்ப பூங்கா (டைடல் பார்க்) மற்றும் எல்கார்ட் அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார்.

    பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜனதாவும், மத்திய அரசும் எதுவும் செய்யாமல், சிறுபிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவற்றை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான வேலைகளை அவர்கள் தமிழகத்திற்கு செய்ய வேண்டும்.

    .

    தி.மு.க இதை விட பெரிய முதலைகளை எல்லாம் சந்தித்த இயக்கம். இந்த அடக்குமுறையில் இருந்தும் இன்னும் வலிமையாக வெளியே வருவோம். நிச்சயமாக எங்கள் மீது எந்த தவறும் இல்லை என நிருபித்து செந்தில் பாலாஜி வழக்கில் இருந்து வெளியே வருவார்.

    திமுகவை அடக்க வேண்டும் என்று நினைத்தால், இன்னும் வேகமாக வெளியே வரும் இயக்கம் தான் தி.மு.க. இயக்கம்.

    கலைஞரின் வளர்ப்பு, தளபதியின் தம்பிகளாகிய நாங்கள், இதற்கெல்லாம் பயந்து போகும் ஆட்கள் கிடையாது. செந்தில் பாலாஜி கைதின்போது நிறைய விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது.

    மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. அதைக் கண்டு பயப்பட்டு, மத்திய அரசு அவர்களிடம் இருக்கும் துறைகளை ஏவி ஏதாவது செய்ய முடியுமா? என பார்க்கின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை,

    நாங்கள் யார் என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் அதிகாரிகளுக்கு 42 டேப்லெட்டுகளை வழங்கினார்.
    • கல்லூரி மாணவர்களுக்கு ராக்கிங் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    கோவை,

    கோவை மாநகரில் உள்ள 14 போலீஸ் நிலையங்களில் களப் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய டேப்லெட் வழங்கும் நிகழ்ச்சி கோவை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

    விழாவில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு 42 டேப்லெட்டுகளை வழங்கினார்.இந்த டேப்லெட்டில் நிறுவப்பட்டுள்ள செயலிகள் உதவிகள் கொண்டு அலுவல் செய்ய வேண்டிய இடத்திற்கு எளிதில் செல்லலாம்.

    களத்தில் உள்ள போலீசார் பணி விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதுடன் தகவல்களையும், உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை பரிமாறிக் கொள்ளலாம்.

    மேலும் இதன் மூலம் போலீஸ் நிலைய எல்லையில் உள்ள பதட்டமான இடங்கள், முதியோர்களுக்கு உதவுதல், ரவுடிகளை கண்காணித்தல் ஆகியவற்றையும் நிர்வகிக்க முடியும்.

    இந்த டேப்லெட்டில் நிறுவப்பட்டுள்ள செயலிகள் மூலம் சேகரித்து பாதுகாக்கப்படும் விபரங்களை தினந்தோறும் அல்லது வாராந்திர அல்லது மாதாந்திர அறிக்கையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    புதிதாக ஏதேனும் ஒரு கட்டிடத்தையோ அல்லது ஒரு இடத்தையோ போலீஸ் நிலைய எல்லைக்குள் சேர்க்க வேண்டும் என்றால் அதையும் ஜி.பி.எஸ்உதவியுடன் மார்க் செய்து கொள்ளலாம். இதில் துணை கமிஷனர்கள் மதிவாணன், சண்முகம், சுகாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்த பின்னர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை நகரில் சிக்னல் இல்லாத சாலையாக, ஸ்மார்ட் சாலையாக பயன்படுத்தி வருகிறோம். களத்தில் வேலை பார்க்கும் போக்குவரத்து போலீசாருக்கு ரிப்ளைட்டிங் ஜாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.

    பள்ளி திறக்கும் அன்றைய நாள் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர் மற்றும் போலீசாரை எப்படி அனுகுவது என்பது குறித்து நோட்டீஸ் கொடுக்க உள்ளோம்.

    முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ராக்கிங் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்து கள் குறைந்து ள்ளது. சாலையை எளிமையாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    மாயமான சிறுவர்கள் நிறைய பேர் காதல் வயப்பட்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்களுடன் காணாமல் போனவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். தற்போது 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

    • பொம்மன், பெள்ளியை பிரதமர் டெல்லிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
    • பிரதமரிடம் எங்கள் பகுதிக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டுள்ளோம் என்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு இன்று பிரதமர் மோடி வந்தார்.

    அவர் அங்கு ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டினர்.

    பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமரிடம் தாங்கள் பேசியதும், பிரதமர் தங்களிடம் என்ன பேசினார் என்பது குறித்து பெள்ளி கூறியதாவது:-

    பிரதமர் நேரில் வந்து எங்களை சந்தித்ததே பெரும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. அவர் எங்களை நேரில் வந்து சந்திப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பிரதமர் காப்பகத்திற்குள் காரில் வந்ததும், காரை விட்டு இறங்கி நேராக எங்களை நோக்கி வந்தார்.

    வந்ததும், எங்கள் இருவரின் கைகளையும் பற்றி உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று கூறினார்.

    பின்னர் எங்களிடம், ரகு, பொம்மி யானையை எப்படி வளர்த்தீர்கள். யானைகள் உங்களிடம் எப்படி பழகியது. எவ்வாறு உங்களுடன் இணைந்து பழக தொடங்கியது என பல்வேறு தகவல்களை கேட்டு எங்களுடன் உரையாடினார்.

    அதற்கு நாங்கள், இந்த 2 குட்டி யானைகளையும் எங்களது பிள்ளை போல் பாவித்து வளர்த்ததாக தெரிவிக்கவே, அதை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டார்.

    மேலும் நீங்கள் வளர்த்தது போல யாரும் யானைகளை இப்படி பராமரித்தது இல்லை. கேரள, கர்நாடகாவில் கூட இது போன்று யாரும் பராமரித்தது இல்லை.

    அந்த ஆவணப்படத்தில் நீங்கள் யானை குட்டிகளை பராமரிப்பதற்கு பட்ட கஷ்டங்களை தெரிவித்தது, அதற்காக நீங்கள் செய்த தியாகங்களை எல்லாம் அதில் பார்த்தேன். அதை பார்த்தவும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதனால் தான் நான் உங்களை சந்திக்க வந்ததாக தெரிவித்தார்.

    பிரதமர் படத்தை முழுவதுமாக பார்த்து விட்டு எங்களுடன் உரையாடியது பெருமையாக இருந்தது.

    அத்துடன் எங்கள் இருவரையும் பிரதமர் டெல்லிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஆனால் நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். அதற்கு அவர் நீங்கள் கட்டாயம் டெல்லி வர வேண்டும் என்றார்.

    ரகு, பொம்மி யானைகளுடன் நீங்கள் இன்னமும் தொடர்பில் இருக்கிறீர்களா? என கேட்டார். நாங்கள் இன்னமும் தொடர்பில் இருக்கிறோம் என்றோம்.

    நாங்கள் பிரதமரிடம் எங்கள் பகுதிக்கு சாலை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டுள்ளோம். அவரும் மாவட்ட கலெக்டரை சந்தித்து நீங்கள் மனு அளியுங்கள். நான் அவரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க சொல்கிறேன் என உறுதியளித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×