search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Conference"

    • தேர்தலில் நேர்மையை உறுதி செய்வது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
    • 11 நாடுகளைச் சேர்ந்த 50 பார்வையாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

    தேர்தல் மேலாண்மை அமைப்பின் பங்கு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. டெல்லியில் நாளை தொடங்கும் இந்த மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த மாநாட்டின் நிறைவு அமர்வுக்கு தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே தலைமை தாங்குகிறார். 

    உலகெங்கிலும் தேர்தல்களை நடத்துவது தொடர்பான தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள், யுஎன்டிபி போன்ற அமைப்புகளுக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்மீனியா, மொரிஷியஸ், நேபாளம், சிலி, கிரீஸ், பிலிப்பைன்ஸ் உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த 50 பார்வையாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் டெல்லியில் உள்ள பல நாடுகளின் தூதரகங்களை சேர்ந்த பிரநிதிகளும் இதில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் முதல் இரண்டு அமர்வுகள் தேர்தல் நேர்மையை உறுதி செய்வது மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    • நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் குறிக்கோள்களில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கினை பற்றி அமெரிக்காவின் நார்தர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் கேத்தலின் வெஸ்ட்மன் நேரில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
    • அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் சவுஜான்யா தர்மசங்கர் நிலையான வளர்ச்சியில் உள்ள பசி இல்லாமை பற்றி பேசினார்.

    நெல்லை:

    நெல்லை அரியகுளம் ஸ்ரீ சாரதா மகளிர் தன்னாட்சி கல்லூரியில் நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் குறிக்கோள்களில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கு குறித்த சர்வதேச கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    கல்லூரி முதுநிலை சமூகப்பணித்துறையின் சார்பாக நடைபெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வுகளை கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    முதுநிலை சமூகப்பணித் துறையின் 2-ம் ஆண்டு மாணவி கீதாஞ்சலி வரவேற்றார். கல்லூரி முதல்வர் கமலா தலைமை உரையாற்றினார். தொடக்க உரையினை கல்லூரியின் கல்வி இயக்குநர் மேஜர் சந்திரசேகரன் வழங்கினார்.

    நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் குறிக்கோள்களில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கினை பற்றி அமெரிக்காவின் நார்தர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் கேத்தலின் வெஸ்ட்மன் நேரில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் சவுஜான்யா தர்மசங்கர் நிலையான வளர்ச்சியில் உள்ள பசி இல்லாமை பற்றியும், பேராசிரியர் சந்திரசேகர் தேசிய கல்விக்கொள்கை -கல்வியின் தரத்தினை பற்றியும், திருவேடகம், விவேகானந்தா கல்லூரியின் பொருளியல் துறைத்தலைவர் சதீஷ்பாபு சிறந்த வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் என்ற தலைப்பிலும் உரை யாற்றினர்.

    லண்டனிலிருந்து இணைய வழியில் கலந்து கொண்ட நியூட்டன் சர்வதேச சக ஸ்வான்சீ பல்கலைக்கழக லோகு இக்கலந்தாய்வில் நிலையான வளர்ச்சி இலக்கினை அடைய, தேசிய கல்விக்கொள்கையில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கின் முக்கியத்துவத்தினை தொகுத்து தொகுப்புரை யாற்றினார். இந்நிகழ்வில் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி மற்றும் சாரதா கல்வியியல் கல்லூரி பேராசிரியர்களும், ஸ்ரீசாரதா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டனர். உலகளவில் பேராசிரியர்களும், மாணவ-மாணவிகளும் இணைய வழியில் பங்கேற்ற னர்.

    கல்லூரியின் சமூகப் பணித்துறை தலைவர் அகிலா நன்றி கூறினார். இந்நிகழ்வி னை ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் ஜானகி மற்றும் ஆங்கிலத்துறை முதுநிலை 2-ம் ஆண்டு மாணவி லிசி சுபாஷினி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.


    வருங்காலத்தில் இந்தியாவை கடுமையான வெப்பம் தாக்கும் என்று பருவ நிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #climatechange #indiahitweaves #hitweaves
    புதுடெல்லி:

    சூரிய ஒளி பூமியை நேரடியாக தாக்காமல் இருக்க பூமி கோளத்தை சுற்றி குடை போல ஓசோன் படலம் இருக்கிறது.

    நாம் எரிக்கப்பயன்படுத்தும் பொருட்களால் கார்பன் வெளியேறி அவை ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்துகின்றன. இதனால் சூரிய வெப்பத்தின் தாக்குதல் பூமியில் அதிகமாகிறது. இது பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தி, பல்வேறு பாதிப்புகளை உருவாக்குகிறது.

    பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்காக ஐ.நா.சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக ஐ.நா.சபையின் மேற்பார்வையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட பருவ நிலை மாற்றக்குழு செயல்பட்டு வருகிறது.

    இந்த குழு பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    பருவ நிலை மாற்றத்தை எப்படி கட்டுப்படுத்துவது? இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை இந்த குழு தயாரித்துள்ளது.

    வருகிற டிசம்பர் மாதம் போலந்து நாட்டில் உள்ள கடோவைஸ் நகரில் பருவ நிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்பட உள்ளது.

    இந்த ஆய்வு அறிக்கை இப்போது வெளியாகி உள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வருங்காலத்தில் இந்தியாவை கடுமையான வெப்பம் தாக்கும் என்று அதில் கூறியுள்ளனர்.


    ஏற்கனவே பருவநிலை மாற்றம் காரணமாக 2015-ம் ஆண்டு இந்தியாவை கடுமையான வெப்பம் தாக்கியது. அப்போது 2,500 பேர் உயிர் இழந்தனர். அதே போன்ற வெப்ப தாக்குதல் இனிமேல் இருக்கும் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

    கடந்த 150 ஆண்டில் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழிற்சாலைகள் வந்த பிறகு அதற்கு பயன்படுத்தப்படும் எரிபொருட்களால் கார்பன் வெளியேறி இந்த மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

    150 ஆண்டுகளில் டெல்லியின் வெப்ப நிலை 1 டிகிரி அதிகரித்து இருக்கிறது. மும்பையில் 0.7 டிகிரியும், கொல்கத்தாவில் 1.2 டிகிரியும், சென்னையில் 0.6 டிகிரியும் அதிகரித்து உள்ளன.

    தொடர்ந்து நிலைமை மோசமாக இருப்பதால் 2030-ம் ஆண்டு வாக்கில் வெப்பநிலை மேலும் 1.5 டிகிரி அதிகரிக்கும் என்றும் பின்னர் 2052-க்குள் அதற்கு மேல் 1.5 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

    எனவே வெப்ப நிலையை குறைப்பதுடன் 1.5 டிகிரிக்கு மேல் அதிகரித்து விடாமல் தடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்திய துணைக்கண்டத்தை பொறுத்தவரையில் கொல்கத்தா, கராச்சியில் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறுகின்றது. வெப்பநிலை 2 டிகிரி வரை அதிகரித்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற விவரங்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    அதன் படி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கடுமையான வெப்பநிலை நிலவும். மலேரியா, டெங்கு போன்ற கிருமிகளால் ஏற்படக்கூடிய நோய்கள் பரவும். 2050-ம் ஆண்டு வாக்கில் 35 கோடி மக்கள் கடுமையாக பாதிப்புகளை சந்திக்க நேரிடும். விவசாய உற்பத்தி கடுமையாக பாதிப்படையும், இதனால் விலைவாசி உயர்வு, வறுமை, மக்கள் இடம் பெயர்வு போன்றவையும் நிகழும். கடலில் வெப்ப நிலை அதிகரித்து உயிர் இனங்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும். காடுகள் தீப்பற்றி எரியும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக பருவ நிலை மாற்றம் நிபுணர் ஆர்தர் வெயின்ஸ் கூறும் போது, பருவ நிலை மாற்றத்தால் பல கோடி மக்கள் உயிரிழப்பை சந்திக்க வேண்டி இருக்கும் என்றார்.

    வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் கார்பன் வெளியீடு 45 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறினார்கள். வெப்ப நிலை அதிகரிக்கும் போது தாவரங்கள் வளர முடியாத நிலை உருவாகியும், அரிசி, கோதுமை, மக்காச்சோளம் தானியங்கள் விளைய முடியாமல் கடும்பாதிப்பை ஏற்படும். இதனால் உணவு பற்றாக்குறையால் பஞ்சம் ஏற்படும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறது.

    ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜாய்ஸ்ரீராய் கூறும் போது, நிலக்கரியை மின் உற்பத்திக்கு அதிகமாக பயன்படுத்துவதால் கார்பன் வெளியீடு மிக அதிகமாக இருக்கிறது.

    இந்தியாவில் மட்டும் 92 கோடி டன் கார்பன்கள் அனல் மின்நிலையங்களில் நிலக்கரியை எரிப்பதன் மூலம் வெளியேறுகிறது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. மாசு ஏற்படாத மாற்று மின் உற்பத்திக்கு நாம் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது என்று கூறினார். #climatechange #indiahitweaves #hitweaves
    ×