search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Internal party election"

    • மாநகராட்சி பகுதியில் உள்ள பகுதி கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, ஆண்டிபாளையம் மற்றும் முத்தணம்பாளையம் ஆகிய 3 கிளைகளுக்கு, பலவஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தி.மு.க.,பகுதி கிளை நிர்வாகிகள் தேர்தலுக்கு நாளை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறவுள்ளது.தி.மு.க.,வின் 15வது உட்கட்சி அமைப்பு தேர்தல் கடந்த பல மாதங்களாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    இதில் மாநகராட்சி பகுதியில் உள்ள பகுதி கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், பகுதியில் உள்ள பகுதி கிளைகளுக்கான வேட்பு மனுக்கள் நாளை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பெறப்படும். தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் மனுக்களை பெறுகிறார்.

    இதில், திருப்பூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட வேலம்பாளையம், அண்ணா நகர், பாண்டியன் நகர், கொங்கு நகர், வாலிபாளையம் மற்றும் நல்லுார் ஆகிய ஏழு கிளைகளுக்கு, மத்திய மாவட்ட அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படும்.

    அதேபோல் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, ஆண்டிபாளையம் மற்றும் முத்தணம்பாளையம் ஆகிய 3 கிளைகளுக்கு, பலவஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படுகிறது. இதில் பகுதி கிளைக்கு, அவைத் தலைவர், செயலாளர், மூன்று துணை செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

    • விண்ணப்பங்களை தேர்தல் ஆணையர் சிவ.ஜெயராஜ் பெற்றுக் கொண்டார்
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுக்கான உட் கட்சி தேர்தலுக்கான விருப்பமனுக்கள் பெறப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில், வாணியம்பாடி சசிபிரியா மஹாலில் நடைபெற்ற வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை வழங்குதல் மற்றும் விருப்பமனு பெறும் நிகழ்ச்சியில் கழக உட்கட்சி தேர்தலில் போட்டியிடும் கட்சியினரிடம் விருப்பமனுக்களை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் ஆணையர் சிவ. ஜெயராஜ் பெற்றுக் கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை, செங்கம் மு.பெ.கிரி, திருப்பத்தூர் அ.நல்லதம்பி எம்.எல்.ஏ, திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர்கள் கே.பி.ஆர்.ஜோதிராஜன், ஆ.சம்பத்குமார், மாவட்டப் பொருளாளர் டி.ரகுநாத், தலைமை செயற்குழு உறுப்பினர் பூ.சதாசிவம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே. பிரபாகரன் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், பிறஅணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

    ×