என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தி.மு.க., உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு நாளை தாக்கல்- நிர்வாகிகள் உற்சாகம்
- மாநகராட்சி பகுதியில் உள்ள பகுதி கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
- வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, ஆண்டிபாளையம் மற்றும் முத்தணம்பாளையம் ஆகிய 3 கிளைகளுக்கு, பலவஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தி.மு.க.,பகுதி கிளை நிர்வாகிகள் தேர்தலுக்கு நாளை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறவுள்ளது.தி.மு.க.,வின் 15வது உட்கட்சி அமைப்பு தேர்தல் கடந்த பல மாதங்களாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இதில் மாநகராட்சி பகுதியில் உள்ள பகுதி கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், பகுதியில் உள்ள பகுதி கிளைகளுக்கான வேட்பு மனுக்கள் நாளை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பெறப்படும். தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன் மனுக்களை பெறுகிறார்.
இதில், திருப்பூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட வேலம்பாளையம், அண்ணா நகர், பாண்டியன் நகர், கொங்கு நகர், வாலிபாளையம் மற்றும் நல்லுார் ஆகிய ஏழு கிளைகளுக்கு, மத்திய மாவட்ட அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படும்.
அதேபோல் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, ஆண்டிபாளையம் மற்றும் முத்தணம்பாளையம் ஆகிய 3 கிளைகளுக்கு, பலவஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படுகிறது. இதில் பகுதி கிளைக்கு, அவைத் தலைவர், செயலாளர், மூன்று துணை செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்