என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intercropping"

    • உடன்குடி, பரமன்குறிசி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தற்போது பல்வேறு ஊடு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு சாதனை படைக்கின்றனர்.
    • உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து குளங்களும், குட்டைகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

    உடன்குடி:

    உடன்குடி, பரமன்குறிசி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கோடை காலத்தையும் தாங்கும் தென்னை, பனை விவசாயம் மட்டுமே முன்பு எல்லாம் நடந்து வந்தது. தற்போது பல்வேறு ஊடு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு சாதனை படைக்கின்றனர். வாழை விவசாயத்துடன் நிலக்கடலையையும், பனை மரத்துடன் தென்னை, முருங்கை என்று ஊடு பயிராக பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    இதைப்போல சக்கரவள்ளி கிழங்கு. மரவள்ளி கிழங்கு, சப்போட்டா, மா, சவுக்கு என பல வகையில் பயிரிட்டு தற்போது விவசாய தொழிலில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். அதனால் உடன்குடி மற்றும் சுற்றுபுற பகுதியில் பல கிராமங்களில் விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு பருவமழை முறையாக பெய்யவில்லை.மிக மிக குறைவாகவே பெய்தது, இதனால் உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து குளங்களும், குட்டைகளும் தண்ணீரில் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இது பற்றி விவசாயி ஒருவர் கூறும்போது, இறைவன் மனது வைத்தால் ஒரு நாள் இரவு பகலாக மழை பெய்தால் எங்கள் பகுதியில் உள்ள அனைத்து குளங்களும், குட்டைகளும் நிரம்பிவிடும். எப்படியும் மழை வரும் குளங்கள்- குட்டைகள் எல்லாம் நிரம்பும். விவசாய நிலம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் ஊடுபயிர் விவசாயத்தை செய்துள்ளோம் என்றனர்.

    • தீவனப்பற்றாக் குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும், தீவன அபிவிருத்தி திட்டங்களை தமிழக அரசின், கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி வருகிறது.
    • 60 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட மர, பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1 ஹெக்டேர் பரப்பளவில் தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக் குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும், தீவன அபிவிருத்தி திட்டங்களை தமிழக அரசின், கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக 60 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட மர, பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1 ஹெக்டேர் பரப்பளவில் தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட வேண்டும்.

    இதனை அரசால் தெரிவிக்கப்படும் காலம் வரை பராமரிக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் சிறு, குறு மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான மொத்த பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இதேபோல், தீவன விரயத்தை குறைப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் மானிய விலையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்த பட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.50 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் சாகுபடி செய்தல் மற்றும் மின்சார வசதி உடையவராகவும் இருக்க வேண்டும்.

    இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கடந்த 10 ஆண்டுகளில் அரசு திட்டங்களில் பயன்பெற்ற வராக இருக்கக் கூடாது. மேலும் சிறு, குறு விவ சாயிகள், பெண் விவசாயி கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    இத்திட்டத்திற்காக தேர்வு செய்யும் பயனாளி 50 சதவீதம் பயனாளி பங்குத்தொகை செலுத்த வேண்டும். தகுதிவாய்ந்த நபர்கள் இம்மாதம் 13-ந் தேதிக்குள் தங்கள் கிராமத்திற்குட்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

    ×