search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inssist"

    • இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றன.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    கருமத்தம்பட்டி,

    கருமத்தம்பட்டி, சோமனூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் மேலும் நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்பட்டது.

    பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இப்பகுதி சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற இந்த சாலையோரத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் பவர் ஹவுஸ் பகுதியில் தரைமட்டபாலம் கட்டப்பட்டது. கடந்த சில தினங்களாக சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இப்பகுதியில் கடந்த ஒரு சில வருடத்திற்கு முன்பு வரை தொடர்ந்து மழைநீர் சாலையில் தேங்கி நின்று சாலை பழுதைடந்து அவ்வ ப்போது விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து தொடர்ந்து இப்பகு தியில் தரைமட்ட பாலம் கட்ட கோரிக்கை விடுத்து வந்தோம். இதனையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மழைநீர் செல்ல தரைமட்ட பாலம் கட்டப்பட்டது.

    ஆனால் தரைமட்ட பாலம் கட்டப்பட்டு எவ்வித பயனும் இல்லை. கிருஷ்ணா புரம், பவர் ஹவுஸ், சோமனூர் போன்ற பகுதிகளில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. செந்தில் நகர் பகுதியில் இருந்து வரும் மழைநீர் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை யில் தேங்கி நின்றதால் அப்பகுதியில் இருந்த தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்தது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே இதுகுறித்து கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் செல்ல ஏதுவாக வடிகால் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூட்டத்திற்கு சங்க தலைவர் முத்துப் பாண்டி தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் நாடார் சங்க மாதாந்திர ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சிங்காநல்லூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் முத்துப் பாண்டி தலைமை தாங்கினார்.

    கவுரவ தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் வின்சென்ட், பொருளாளர் விநாயகம் ஆகியோர் வரவேற்று பேசினர். மேலும் துணைத் தலைவர்கள் நாராயண, குணசிங், செல்வகுமார், உச்சித ராஜா, செல்வன், பென்னியமீன் ஜெபராஜ், பிரின்ஸ், கொள்கை பரப்புச் செயலாளர்கள் செல்வன், ஜானி டேனியல் ராஜ், ராஜ சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு மற்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் வாழ்த்து கூறினர்.

    மேலும் சிங்காநல்லூர் நாடார் சங்கத்திற்கு அதிக உறுப்பினர்கள் சேர்த்து பலப்படுத்துவது, மற்றும் உறுப்பினர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் பொது மக்களுக்கு அவதி தரும் எஸ்.ஐ .எச். எஸ். காலனி ெரயில்வே மேம்பாலத்தை உடனடியாக முடித்து தர வேண்டும், மேலும் சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்று பாலத்தின் மீது கட்டப்படும் உயர்மட்ட பாலத்தை விரைந்து முடித்து தர வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 

    • மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலை 108 இருந்து 150 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும்.
    • 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வால்பாறை,

    கோவை மண்டல தி.மு.க விவசாய அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது.

    மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுதாகரன் வரவேற்றார்.

    மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலை 108 இருந்து 150 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும். கொப்பரை கொள்முதல் நிதியை 3 மடங்காக உயர்த்தி தர வேண்டும்.

    பசுமை வாரியத்தின் 10.11.2021 தேதியிட்ட நடவடிக்கையை திரும்ப பெற நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வை திரும்ப பெற நடந்து வரும் கையெழுத்து இயக்கத்திற்கு விவசாய அணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தர்மலிங்கம், குறிஞ்சி சிவகுமார், அல்லி பட்டி மணி, மதுரை கணேஷ், அப்துல் ஹமீது, டேம் வெங்கடேஷ், கோழிக்கடை கணேஷ், ஜே.பாஸ்கர், சுரேஷ்குமார் மற்றும் விவசாய அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×