search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொப்பரை கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும்- தி.மு.க. விவசாய அணி நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
    X

    கொப்பரை கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும்- தி.மு.க. விவசாய அணி நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்

    • மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலை 108 இருந்து 150 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும்.
    • 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வால்பாறை,

    கோவை மண்டல தி.மு.க விவசாய அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது.

    மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுதாகரன் வரவேற்றார்.

    மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலை 108 இருந்து 150 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும். கொப்பரை கொள்முதல் நிதியை 3 மடங்காக உயர்த்தி தர வேண்டும்.

    பசுமை வாரியத்தின் 10.11.2021 தேதியிட்ட நடவடிக்கையை திரும்ப பெற நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வை திரும்ப பெற நடந்து வரும் கையெழுத்து இயக்கத்திற்கு விவசாய அணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தர்மலிங்கம், குறிஞ்சி சிவகுமார், அல்லி பட்டி மணி, மதுரை கணேஷ், அப்துல் ஹமீது, டேம் வெங்கடேஷ், கோழிக்கடை கணேஷ், ஜே.பாஸ்கர், சுரேஷ்குமார் மற்றும் விவசாய அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×