search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Industrial Relations Award"

    • தொழில் நல்லுறவு விருதுக்கு வருகிற 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • தொழிலாளர் துறை இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிர மணியன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நல்ல தொழில் உறவினை பேணி பாதுகாக்கும், வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற் சங்கங்களுக்கு 2017, 2018, 2019, 2020 ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமை க்கப்பட்ட ஒரு முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும்.

    இந்த விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறை இணையதளத்தில் இருந்து (http://www/labour.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப ங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகங்கள் மற்றும் சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

    ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பத்துடனும், விண்ணப்ப கட்டணம் செலுத்திய விபரங்களையும் இணைத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு கடந்த டிசம்பர் 31-ந்தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்க ப்பட்டது. தற்போது மேற்படி விண்ணப்பங்களை பெற வருகிற 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இவ்விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் http//www.labour.tn.gov.in வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    சேலம்:

    வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நல்ல தொழில் உறவினை பேணிப் பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்க–ளுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.

    இவ்விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் http//www.labour.tn.gov.in வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகமான தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்), வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை, தேனாம்பேட்ைட, டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிம் பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய, விவரத்தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு அடுத்க்குத மாதம் 11-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    ஒவ்வொரு விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணமாக விண்ணபித்தவர் தொழிற்சங்கமானால் ரூ.100-ம், வேலையளிப்பவரானால் ரூ.250-ம் கீழ்காணும் கணக்குத்தலைப்பின் கீழ் https//www.karuvoolam.in.gov.tn/challan/echallan வலைதளத்தில் இ-செல்லான் மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு வைத்து அனுப்ப வேண்டும்.

    • தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    வேலையளிப்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணிப் பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.

    இவ்விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்திலிருந்து http://www.kdourtagoxin பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை: ஆணையர் (சமரசம்) அலுவலகம் வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழில்க பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை. தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

    ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு 11.11.2022க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துடனும். விண்ணப்பக் கட்டணமாக விண்ணப்பித்தவர் தொழிற்சங்கமானால் ரூ.100/ம். வேலையளிப்பவரானால் ரூ.250/ம் கீழ்காணும் கணக்குத்தலைப்பின் கீழ் https:/www.karuvoolam.tn.gov.in/challanv/echallan வலைதளத்தில் tchallan மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு(challam) வைத்து அனுப்ப வேண்டும்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

    ×