search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் நல்லுறவு விருதுக்கு வருகிற 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
    X

    தொழில் நல்லுறவு விருதுக்கு வருகிற 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    • தொழில் நல்லுறவு விருதுக்கு வருகிற 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • தொழிலாளர் துறை இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிர மணியன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நல்ல தொழில் உறவினை பேணி பாதுகாக்கும், வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற் சங்கங்களுக்கு 2017, 2018, 2019, 2020 ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமை க்கப்பட்ட ஒரு முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும்.

    இந்த விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறை இணையதளத்தில் இருந்து (http://www/labour.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப ங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகங்கள் மற்றும் சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

    ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பத்துடனும், விண்ணப்ப கட்டணம் செலுத்திய விபரங்களையும் இணைத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு கடந்த டிசம்பர் 31-ந்தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்க ப்பட்டது. தற்போது மேற்படி விண்ணப்பங்களை பெற வருகிற 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×