என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » india economy
நீங்கள் தேடியது "India economy"
இந்திய பொருளாதாரம் 2022-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக, 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயரும் என பிரதமர் மோடி கூறினார். #IndianEconomy #NarendraModi #IICC #Delhi
புதுடெல்லி:
டெல்லியில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “இந்திய பொருளாதாரம் 8 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சி அடையும். இதனால் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சில்லரை விற்பனை துறையில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். நாட்டின் பெரும்பொருளாதார அடிப்படை, நல்ல வலுவாக உள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “2022-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் இரு மடங்காக, 5 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயரும். இதில் உற்பத்தித்துறையும், விவசாயத்துறையும் தலா 1 லட்சம் கோடி டாலர் என்ற அளவை எட்டும்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து ஊக்குவித்ததின் காரணமாக இப்போது நாட்டில் உபயோகத்தில் உள்ள 80 சதவீத செல்போன்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக அமைந்துள்ளன.
இது ரூ.3 லட்சம் கோடி அன்னிய செலாவணியை மிச்சப்படுத்த உதவியாக அமைந்தது. மத்திய அரசு, தைரியமான முடிவுகளை எடுக்கிற துணிச்சலைக் கொண்டுள்ளது” எனவும் மோடி கூறினார்.
இந்த விழாவில் மோடி பேசும்போது, நாட்டின் 3-வது பெரிய வங்கியாக உருவாகிற வகையில் தேனா வங்கி, விஜயா வங்கி, பரோடா வங்கி ஆகிய 3 வங்கிகளை ஒரே வங்கியாக இணைக்கிற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருப்பதை சுட்டிக்காட்டினார். சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தவுலா குவான் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகேயுள்ள துவாரகாவுக்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். 14 நிமிட பயணத்துக்கு பின்னர் அவர் துவாரகா சென்றடைந்தார். விழா முடிந்த பின்னரும் அவர் மெட்ரோ ரெயிலில் திரும்பினார்.
பிரதமர் மோடி, டெல்லியில் மெட்ரோ ரெயில் பயணம் மேற்கொள்வது ஒன்றும் புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. #IndianEconomy #NarendraModi #IICC #Delhi
டெல்லியில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “இந்திய பொருளாதாரம் 8 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சி அடையும். இதனால் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சில்லரை விற்பனை துறையில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். நாட்டின் பெரும்பொருளாதார அடிப்படை, நல்ல வலுவாக உள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “2022-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் இரு மடங்காக, 5 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயரும். இதில் உற்பத்தித்துறையும், விவசாயத்துறையும் தலா 1 லட்சம் கோடி டாலர் என்ற அளவை எட்டும்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து ஊக்குவித்ததின் காரணமாக இப்போது நாட்டில் உபயோகத்தில் உள்ள 80 சதவீத செல்போன்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக அமைந்துள்ளன.
இது ரூ.3 லட்சம் கோடி அன்னிய செலாவணியை மிச்சப்படுத்த உதவியாக அமைந்தது. மத்திய அரசு, தைரியமான முடிவுகளை எடுக்கிற துணிச்சலைக் கொண்டுள்ளது” எனவும் மோடி கூறினார்.
இந்த விழாவில் மோடி பேசும்போது, நாட்டின் 3-வது பெரிய வங்கியாக உருவாகிற வகையில் தேனா வங்கி, விஜயா வங்கி, பரோடா வங்கி ஆகிய 3 வங்கிகளை ஒரே வங்கியாக இணைக்கிற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருப்பதை சுட்டிக்காட்டினார். சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தவுலா குவான் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகேயுள்ள துவாரகாவுக்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். 14 நிமிட பயணத்துக்கு பின்னர் அவர் துவாரகா சென்றடைந்தார். விழா முடிந்த பின்னரும் அவர் மெட்ரோ ரெயிலில் திரும்பினார்.
பிரதமர் மோடி, டெல்லியில் மெட்ரோ ரெயில் பயணம் மேற்கொள்வது ஒன்றும் புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. #IndianEconomy #NarendraModi #IICC #Delhi
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தையே நாசமாக்கி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கூறியுள்ளார். #KapilSibal #NarendraModi
புதுடெல்லி:
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வராகடன்களை அதிகமாக உருவாக்கி விட்டதால் நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இதுசம்பந்தமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில்சிபல் கூறியதாவது:-
பிரதமர் மோடி விரக்தியில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார். ஆதாரம் இல்லாத தகவல்களை உரக்க கூறினால் அது மக்களிடம் எடுபட்டுவிடும் என அவர் நினைக்கிறார்.
முதலில் இதுசம்பந்தமான ஆதாரங்களை மோடி வெளியிடட்டும். மோடி தான் கடுமையான உழைப்பாளி என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தையே நாசமாக்கிவிட்டார்.
யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லை. அதுக்கான தீர்வையும் காணவில்லை. பாரதிய ஜனதா கட்சி தான் நாட்டின் செயல்படாத சொத்தாக இருந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு கபில்சிபல் கூறினார். #KapilSibal #NarendraModi
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வராகடன்களை அதிகமாக உருவாக்கி விட்டதால் நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இதுசம்பந்தமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில்சிபல் கூறியதாவது:-
பிரதமர் மோடி விரக்தியில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார். ஆதாரம் இல்லாத தகவல்களை உரக்க கூறினால் அது மக்களிடம் எடுபட்டுவிடும் என அவர் நினைக்கிறார்.
முதலில் இதுசம்பந்தமான ஆதாரங்களை மோடி வெளியிடட்டும். மோடி தான் கடுமையான உழைப்பாளி என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தையே நாசமாக்கிவிட்டார்.
யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லை. அதுக்கான தீர்வையும் காணவில்லை. பாரதிய ஜனதா கட்சி தான் நாட்டின் செயல்படாத சொத்தாக இருந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு கபில்சிபல் கூறினார். #KapilSibal #NarendraModi
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
