search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Imported Sand"

    வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலுக்கான தொகையை செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ImportedSand #SupremeCourt
    புதுடெல்லி:

    மலேசியாவில் இருந்து ராமையா நிறுவனம் இறக்குமதி செய்த மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுத்துச் சென்று விற்க தமிழக அரசு தடை விதித்தது. தடையை எதிர்த்து மணல் இறக்குமதி நிறுவனங்கள் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மதுரை ஐகோர்ட்டு அரசின் தடை உத்தரவை ரத்து செய்தது.



    இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது, இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்கிக்கொள்வதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக மணல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது டன்னுக்கு 2050 ரூபாய் வழங்க தமிழக அரசு தெரிவித்தது.

    இது தொடர்பாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை ஒரு டன் ரூ.2,050-க்கு கொள்முதல் செய்து தமிழக அரசே விற்கலாம் என்று அனுமதி அளித்து விசாரணையை ஒத்திவைத்தது.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கான தொகையை செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஒரு டன்னுக்கு 2050 ரூபாய் வீதம் 55 ஆயிரம் டன் மணலுக்கான தொகையை (ரூ.11.27 கோடி) ஒரு வாரத்திற்குள் செலுத்தும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #ImportedSand #SupremeCourt
    மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கட்டுமானத்திற்கு பயன்படுத்த முடியாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. #TNGovt #importedsand #SC
    புதுடெல்லி:

    மலேசியாவில் இருந்து தனியார் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 55 டன் மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசாணையை காட்டி, மணலை விற்பனை செய்ய மாவட்ட கலெக்டர் தடை விதித்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அந்த தனியார் நிறுவனம் முறையீடு செய்தது. இறக்குமதி செய்த மணலை வாங்கிக்கொள்ளவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை தமிழக அரசே வாங்கி கொள்ளுமா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக  தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு இன்று மதியம் 12.45-க்கு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டது.

    அதன்படி தமிழக அரசின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், மலேசியாவில் இருந்து இறக்குமதியான மணலில் 85% சிலிக்கான் இருப்பதால் கட்டுமானத்துக்கு பயன்படுத்த முடியாது என்று தெரிவித்தது. கட்டுமானத்திற்கு உதவாத இறக்குமதி மணலை வாங்கி நாங்கள் என்ன செய்ய முடியும்? என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

    இதையடுத்து மணல் கட்டுமானத்திற்கு உகந்ததா என ஆய்வு செய்து வரும் 16ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. #TNGovt #importedsand #SC
    ×