search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal boy friend arrest"

    வாணியம்பாடியில் 1½ வயது குழந்தையை கொன்ற தாய், கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். குழந்தைக்கு பாலியல் தொல்லை செய்யப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி, பிப்.17-

    வாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய்-கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.

    வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங்களூரை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் 7 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 குழந்தைகள். 3-வது குழந்தை ரித்திகா (வயது 1½) பெங்களூரில் குடும்பம் நடத்தி வந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முரளி என்பவருடன் நளினிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இதனால் ஏற்பட்ட தகராறில் கணவரை பிரிந்து வாணியம்பாடிக்கு வந்தார். நேற்று முன்தினம் நளினி வீட்டுக்கு முரளி வந்திருந்தார். அப்போது நளினி கடைக்கு சென்று விட்டார். திரும்பி வந்த போது குழந்தை ரித்திகா உடலில் காயத்துடன் உயிருக்கு போராடியது.

    வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் குழந்தை இறந்து விட்டது. வாணியம்பாடி டவுன் போலீசார் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து நளினி அவரது கள்ளக்காதலன் முரளி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் நளினி, முரளியை கைது செய்தனர். குழந்தைக்கு பாலியல் தொல்லை செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர்- சர்ஜாபுரம் ரோட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் லே அவுட் பகுதி பக்கமுள்ள தோப்பில், எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், வாலிபர் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டதில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்த அந்த வாலிபர் கிருஷ்ணகிரி அருகே நாரலபள்ளி கிராமத்தை சேர்ந்த வரதராஜ் என்பவரது மகன் சுப்பிரமணி (வயது 35) என்பதும், இவர் பெங்களூர் அருகே பெல்லந்தூரில் ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார் என்பதும் தெரிய வந்தது மேலும் இவருக்கு பாக்கியலட்சுமி (25) என்ற மனைவி உள்ளார்.

    இந்த நிலையில், சுப்பிரமணியை கொன்றது யார், எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இதில், அவரது மனைவியின் திட்டப்படி, கள்ளக்காதலனே சுப்பிரமணியை கொன்றது தெரிய வந்தது. அதாவது, சுப்பிரமணி வேலை பார்த்து வந்த பெல்லந்தூர் பகுதியில் பானிப்பூரி கடை நடத்தி வருபவர் சரத்குமார் (27). இவர் கிருஷ்ணகிரி அருகே சின்னசக்கனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் ஆவார். சரத்குமாருக்கு திருமணமாகி, மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், பெல்லந்தூரில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து அந்த பகுதியில் மனைவியுடன் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த சுப்பிரமணிக்கும், பானிபூரி கடை நடத்தி வந்த சரத்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், சரத்குமார் அடிக்கடி சுப்பிரமணி வீட்டிற்கு வந்து செல்வாராம். அப்போது, அவரது மனைவி பாக்கியலட்சுமிக்கும், சரத்குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சுப்பிரமணி, மனைவியை கண்டித்து 3 மாதத்திற்கு முன்பு அவரது சொந்த ஊரான நாரலபள்ளிக்கு அழைத்துச்சென்று வீட்டில் விட்டு பெங்களூரு திரும்பினார். இந்நிலையில் பாக்கியலட்சுமியும், சரத்குமாரும் போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர்.

    மேலும், தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள சுப்பிரமணியை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 10-ந் தேதி பாக்கியலட்சுமியை சந்திப்பதற்காக சரத்குமார் நாரலப்பள்ளி சென்றார். அப்போது பாக்கியலட்சுமி, தனது கணவர் மிகவும் டார்ச்சர் செய்வதாகவும், அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்றும் சரத்குமாரிடம் கூறியுள்ளார். பின்னர் பெங்களூரு திரும்பிய சரத்குமார், சுப்பிரமணிக்கு போன் செய்து, புதிய வியாபாரம் செய்வது தொடர்பாக பேசலாம் வா, என்று அவரை வரவழைத்து, தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, பாகலூர்-சர்ஜாபுரம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக்கொண்டும், அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் மது வாங்கியும், அருகிலுள்ள ஒரு லே அவுட்டுக்கு சுப்பிரமணியை அழைத்து சென்றார். லே அவுட் அருகே ஒரு தோப்பில் இருவரும் மது அருந்தியபோது, அதிக போதையில் இருந்த சுப்பிரமணியை கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டார்.

    இதில், சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி இறந்தார். பின்னர், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தியும், சுப்பிரமணி கொலைக்கு பயன்படுத்திய கல்லை, அருகில் இருக்கும் ஏரியில் வீசியும் அங்கிருந்து சரத்குமார் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, சர்ஜாபுரம் பகுதியில் தலைமறைவாக இருந்த சரத்குமாரை பாகலூர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
    பண்ருட்டியில் போலீஸ் விசாரணைக்கு பயந்து இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்தது தொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தண்டுபாளையம் காலனியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 30). டீ மாஸ்டர். இவருடைய மனைவி செல்வி என்கிற தமிழ்செல்வி (25). இவர்களுக்கு மனோஜ் (5) என்ற மகனும், மேனகாதேவி (2½) என்ற மகளும் உள்ளனர்.

    தமிழ்செல்விக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வ குமார் (22) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் செல்வகுமாரின் பெற்றோருக்கும், தமிழ்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

    விசாரணைக்காக செல்வகுமார் மற்றும் தமிழ்செல்வியின் குடும்பத்தினரை போலீஸ் நிலையம் வருமாறு போலீசார் கூறியிருந்தனர். அதன்படி பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு தமிழ்செல்வி தனது 2 குழந்தைகளுடன் வந்தார்.

    பண்ருட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு சென்ற தமிழ்செல்வி, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அங்கிருந்தவர்கள் உடனடியாக தமிழ்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

    போலீஸ் விசாரணைக்கு பயந்த தமிழ்செல்வி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த நிலையில் முன்னதாக இறப்பதற்கு முன்பு தமிழ்செல்வி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவருக்கும், செல்வக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பக்கத்து வீடு என்பதால் செல்வாகுமார் அடிக்கடி வந்து செல்வார். நாட்கள் செல்ல செல்ல அவரது பேச்சு தவறாக இருந்தது.

    மேலும் எனது கணவர் வீட்டில் இல்லாதபோது அடிக்கடி வீட்டுக்குவர ஆரம்பித்தார். ஒருநாள் அவர் என்னை மிரட்டி பலவந்தமாக கற்பழித்தார். இதை வெளியில் கூறினால் என்னையும், கணவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். மேலும் பலமுறை மிரட்டி என்னை அவர் சீரழித்து உள்ளார். அவர் தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால்தான் நான் சாவும் முடிவை எடுத்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கள்ளக்காதலன் செல்வக்குமாரை கைது செய்தனர்.  #Tamilnews
    ×