என் மலர்
செய்திகள்

X
தமிழ்செல்வி
பண்ருட்டியில் போலீஸ் விசாரணைக்கு பயந்து இளம்பெண் தீக்குளித்து மரணம்- கள்ளக்காதலன் கைது
By
மாலை மலர்22 July 2018 10:22 AM IST (Updated: 22 July 2018 10:22 AM IST)

பண்ருட்டியில் போலீஸ் விசாரணைக்கு பயந்து இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்தது தொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தண்டுபாளையம் காலனியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 30). டீ மாஸ்டர். இவருடைய மனைவி செல்வி என்கிற தமிழ்செல்வி (25). இவர்களுக்கு மனோஜ் (5) என்ற மகனும், மேனகாதேவி (2½) என்ற மகளும் உள்ளனர்.
தமிழ்செல்விக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வ குமார் (22) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் செல்வகுமாரின் பெற்றோருக்கும், தமிழ்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
விசாரணைக்காக செல்வகுமார் மற்றும் தமிழ்செல்வியின் குடும்பத்தினரை போலீஸ் நிலையம் வருமாறு போலீசார் கூறியிருந்தனர். அதன்படி பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு தமிழ்செல்வி தனது 2 குழந்தைகளுடன் வந்தார்.
பண்ருட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு சென்ற தமிழ்செல்வி, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அங்கிருந்தவர்கள் உடனடியாக தமிழ்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணைக்கு பயந்த தமிழ்செல்வி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் முன்னதாக இறப்பதற்கு முன்பு தமிழ்செல்வி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது கணவருக்கும், செல்வக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பக்கத்து வீடு என்பதால் செல்வாகுமார் அடிக்கடி வந்து செல்வார். நாட்கள் செல்ல செல்ல அவரது பேச்சு தவறாக இருந்தது.
மேலும் எனது கணவர் வீட்டில் இல்லாதபோது அடிக்கடி வீட்டுக்குவர ஆரம்பித்தார். ஒருநாள் அவர் என்னை மிரட்டி பலவந்தமாக கற்பழித்தார். இதை வெளியில் கூறினால் என்னையும், கணவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். மேலும் பலமுறை மிரட்டி என்னை அவர் சீரழித்து உள்ளார். அவர் தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால்தான் நான் சாவும் முடிவை எடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கள்ளக்காதலன் செல்வக்குமாரை கைது செய்தனர். #Tamilnews
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தண்டுபாளையம் காலனியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 30). டீ மாஸ்டர். இவருடைய மனைவி செல்வி என்கிற தமிழ்செல்வி (25). இவர்களுக்கு மனோஜ் (5) என்ற மகனும், மேனகாதேவி (2½) என்ற மகளும் உள்ளனர்.
தமிழ்செல்விக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வ குமார் (22) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் செல்வகுமாரின் பெற்றோருக்கும், தமிழ்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
விசாரணைக்காக செல்வகுமார் மற்றும் தமிழ்செல்வியின் குடும்பத்தினரை போலீஸ் நிலையம் வருமாறு போலீசார் கூறியிருந்தனர். அதன்படி பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு தமிழ்செல்வி தனது 2 குழந்தைகளுடன் வந்தார்.
பண்ருட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு சென்ற தமிழ்செல்வி, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அங்கிருந்தவர்கள் உடனடியாக தமிழ்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணைக்கு பயந்த தமிழ்செல்வி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் முன்னதாக இறப்பதற்கு முன்பு தமிழ்செல்வி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது கணவருக்கும், செல்வக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பக்கத்து வீடு என்பதால் செல்வாகுமார் அடிக்கடி வந்து செல்வார். நாட்கள் செல்ல செல்ல அவரது பேச்சு தவறாக இருந்தது.
மேலும் எனது கணவர் வீட்டில் இல்லாதபோது அடிக்கடி வீட்டுக்குவர ஆரம்பித்தார். ஒருநாள் அவர் என்னை மிரட்டி பலவந்தமாக கற்பழித்தார். இதை வெளியில் கூறினால் என்னையும், கணவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். மேலும் பலமுறை மிரட்டி என்னை அவர் சீரழித்து உள்ளார். அவர் தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால்தான் நான் சாவும் முடிவை எடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கள்ளக்காதலன் செல்வக்குமாரை கைது செய்தனர். #Tamilnews
Next Story
×
X